Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சீரான குடிநீர் விநியோகம்: மேயர் தலைமையில் ஆய்வு

Print PDF

தினமணி 08.04.2010

சீரான குடிநீர் விநியோகம்: மேயர் தலைமையில் ஆய்வு

மதுரை, ஏப். 7: மாநகராட்சிப் பகுதியில் நான்கு மண்டலங்களிலும் குறிப்பிட்ட நேரத்தில் சரியான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுவது குறித்து மாநகராட்சி மேயர் ஜி.தேன்மொழி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆணையர் எஸ்.செபாஸ்டின் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள், தங்களது வார்டுகளில் குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்தும், குடிநீரில் சாக்கடை கலந்து வருவதை சரிசெய்யவும், பழுதைடைந்த அடிபம்பு குழாய்களை மாற்றவும், குடிநீர் வராத தெருக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யவும் வலியுறுத்திப் பேசினர்.

இதுகுறித்து மேயர் தேன்மொழி கூறுகையில், சில வார்டுகளில் குடிநீர் சரியாக வருவதில்லை என்றும், குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன.

குடிநீர் விநியோகம் சீராக செய்வது குறித்து மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொறியாளர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும், குடிநீரில் கழிவுநீர் கலப்பதை உடனே பார்வையிட்டு சரிசெய்யும் பணியை விரைவில் முடிக்குமாறும் அதிகாரிகளிடம் மேயர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் இசக்கிமுத்து, வி.கே.குருசாமி, மாணிக்கம், நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பேரூராட்சி கிணறுகளை தூர்வார நடவடிக்கை

Print PDF

தினமணி 08.04.2010

கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பேரூராட்சி கிணறுகளை தூர்வார நடவடிக்கை

களியக்காவிளை, ஏப். 7: களியக்காவிளை பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள பொது கிணறுகளை தூர்வாருவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இப் பகுதியில் கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை எடுப்பது என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

களியக்காவிளை பேரூராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் இடங்கள் மற்றும் அதுபற்றி ஆலோசித்து தீர்வு ஏற்படுத்துதல் சம்பந்தமான அவசரக் கூட்டம் மன்றத் தலைவி எஸ். இந்திரா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலர் இரா. சங்கர் முன்னிலை வகித்தார்.

கூட்டம் தொடங்கியதும் 8-வது வார்டு உறுப்பினர் என். விஜயேந்திரன், பேரூராட்சிப் பகுதிகளில் செயலிழந்து காணப்படும் குடிநீர் வால்வுகளை பழுதுநீக்கி சரி செய்வது, பேரூராட்சிக்கு சொந்தமான தூர் வாராத கிணறுகளை தூர்வாரும் பணியினை மேற்கொள்ளவேண்டும்.

மேலும், முறைகேடாக குடிநீர் எடுக்கப்படும் நல்லிகளை அடைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றார். இது தீர்மானமாக பிற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 10 சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கவும், 2 அடி பம்புகள் அமைக்கவும் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்வதாக செயல் அலுவலர் மன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.

பேரூராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும், குடி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும் என மன்ற உறுப்பினர்கள் ஆலோசனை தெரிவித்தனர். தொடர்ந்து 2-வது வார்டு உறுப்பினர் என். விஜயானந்தராம், நெய்யாறு இடதுகரை கால்வாய் தூர்வாரும் பணியை மேற்கொண்டால் கேரள பகுதியிலிருந்து கசிந்து வரும் நீரால் வன்னியூர் ஊராட்சி, களியக்காவிளை பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு குறைவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்றார்.

இப் பணியை பேரூராட்சியால் செய்ய முடியாது என்பதால் தமிழக அரசையும், பொதுப் பணித் துறையையும் கேட்டு, தீர்மானம் நிறைவேற்றி அனுப்பலாம் என செயல் அலுவலர் தெரிவித்தார். இக் கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் சலாவுதீன், உறுப்பினர்கள் பத்மினி, ராதா, ராயப்பன், . ராஜு, கமால், என். விஜயேந்திரன், விஜயானந்தராம், சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 08 April 2010 09:45
 

குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி 08.04.2010

குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு

திருச்சி
, ஏப். 7: திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைக் கழக உதவி துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தடையின்றி குடிநீர் வழங்கும் திட்டம் ரூ. 169 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கொள்ளிடத்தில் 3 பிரதான குடிநீர் சேகரிப்பு கிணறுகளும், 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட குடிநீர் சேகரிப்பு கிணறு கட்டும் பணி, தாங்கு பாலம் அமைக்கும் பணி உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இப் பணிகளைப் பார்வையிட்ட அதிகாரிகள், பணிகளை உரிய காலக்கெடுவுக்குள் முடிக்க அறிவுறுத்தினர். முன்னதாக, மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொறியாளர்கள் மற்றும் வாட்டர் மற்றும் பவர் கன்சல்டன்சி பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் போது, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, நிர்வாகப் பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம், வாட்டர் மற்றும் பவர் கன்சல்டன்சி சேவை நிறுவனப் பிரதிநிதிகள் சுப்பாராவ், நாகேந்திரன், கோபிநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Thursday, 08 April 2010 09:24
 


Page 273 of 390