Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் சப்ளை நிறுத்தம் மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினமலர் 07.04.2010

குடிநீர் சப்ளை நிறுத்தம் மாநகராட்சி அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கமிஷனர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டுப்பாளையம் துணை மின் நிலைய பகுதியில் இன்று பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், மேட்டுப்பாளையம் தலைமை நீர் நிலையங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சாரம் தடை படும். எனவே, குடிநீர் இறைப்பு பணி இருக்காது என்பதால், மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் இன்று ஒரு நாள் தடைபடும். பொதுமக்கள் குடிநீரை முன்னதாக சேமித்து வைத்திருந்து, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

Last Updated on Wednesday, 07 April 2010 06:04
 

தி.மலை நகரில் போர்வெல் வசதியுடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டிகள்

Print PDF

தினமலர் 07.04.2010

தி.மலை நகரில் போர்வெல் வசதியுடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டிகள்

திருவண்ணாமலை: தி.மலை நகரில் போர்வெல் வசதியுடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட்டன.திருவண்ணாமலை நகராட்சி 8 மற்றும் 9வது வார்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளை நகராட்சி தலைவர் ஸ்ரீதரன் திறந்து வைத்தார். துணைத்தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் சேகர், இன்ஜினியர் சந்திரன், கவுன்சிலர்கள் கார்த்திவேல்மாறன், குட்டிபுகழேந்தி, குணசேகர், மோகன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர

Last Updated on Wednesday, 07 April 2010 06:00
 

திருச்சி மாநகரின் ஒரு பகுதியில் விநியோகம் ரத்து

Print PDF

தினமணி 06.04.2010

திருச்சி மாநகரின் ஒரு பகுதியில் விநியோகம் ரத்து

திருச்சி, ஏப். 4: திருச்சி குடமுருட்டி அருகே பிரதான குடிநீர்க் குழாயில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட உடைப்பால், மாநகரின் ஒரு பகுதியில் திங்கள்கிழமை ஒரு நாள் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி தெரிவித்ததாவது: "குடமுருட்டி அருகேயுள்ள பிரதான குடிநீர்க் குழாயில் எதிர்பாராத விதமாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உறையூர், மரக்கடை, விறகுப்பேட்டை ஆகிய மூன்று இடங்களிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றுவது தடைபட்டுள்ளது.

குழாய் உடைப்பைச் சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, திங்கள்கிழமை மரக்கடை, பெரிய கடைவீதி, வளையல்காரத்தெரு, பூலோகநாதர் கோயில் தெரு, மதுரை சாலை, பாலக்கரை, கீழரண் சாலை, பெரிய செüராஷ்டிர தெரு, விறகுப்பேட்டை, வரகனேரி, எடத்தெரு, தாராநல்லூர், காமராஜ் நகர், உறையூர், நவாப்தோட்டம், பாண்டமங்கலம், கோணக்கரை, திருத்தாந்தோனி சாலை, பாளையம்பஜார், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, நாச்சியார்பாளையம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. செவ்வாய்க்கிழமை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்' என்றார் பால்சாமி.

Last Updated on Tuesday, 06 April 2010 10:01
 


Page 276 of 390