Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் தட்டுப் பாட்டை உடனடியாக தீர்க்க நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 30.03.2010

குடிநீர் தட்டுப் பாட்டை உடனடியாக தீர்க்க நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

செய்யாறு: 'செய்யாறு டவுன் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப் பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும்' என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

செய்யாறு நகராட்சி கூட் டத்துக்கு அதன் தலைவர் சம்பத் தலைமை வகித்தார். துணைச்சேர்மன் மோகனவேல், இன்ஜினியர் ராஜா, துப்புரவு ஆய்வாளர் மதன், ஓவர்சீயர் ராமன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:வெங்கடேசன்(திமுக): செய்யாறு நகரில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 6 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் சப்ளை வழங்கப்படுகிறது. 1வது, 2வது வார்டு மக்களின் பயன்பாட்டுக்காக ஈமச்சடங்கு காரிய மேடை அமைக்க வேண்டும்.லோகநாதன்(அதிமுக): நகர் பகுதிகளில் உள்ள கை பம்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். இறைச்சி கடைகளை ஒரே இடத்தில் அமைக்க வேண்டும்.நடேசன்(காங்.,) நகராட்சி பஸ்நிலைய இலவச சிறுநீர் கழிப்பிடத்தில் கட்டணம் வசூலிப்பதா?தலைவர்: அவ்வாறு புகார் வந்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.விஸ்வநாதன்: நகரில் குடிநீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும்.பச்சையப்பன் (அதிமுக): தாய்சேய் நல கட்டடத்தை உடனடியாக திறக்க வேண்டும்.பேபிராணி(திமுக): 12வது வார்டில் குடிநீர், சாக்கடை கழிவுநீர் போல் வருகிறது.குமாரசாமி(திமுக): நகர மக்களுக்கு உடனடியாக இலவச டி.வி., வழங்க வேண்டும்.தலைவர்: அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்னையை போக்க முயற்சி செய்யப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

 

 

Last Updated on Tuesday, 30 March 2010 10:28
 

மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க மாற்றுவழி குறித்து... ஆய்வு : ஹைவேவிஸ் அணையில் இருந்து தேனிக்கு குடிநீர்.

Print PDF

தினமலர் 30.03.2010

மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க மாற்றுவழி குறித்து... ஆய்வு : ஹைவேவிஸ் அணையில் இருந்து தேனிக்கு குடிநீர்.

கம்பம்: ஹைவேவிஸ் அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு குடிநீர் சப்ளை செய்வது குறித்த ஆய்வுகள் குடிநீர் வடிகால்வாரியத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மற்றும் தேனி மாவட்டங்கள் குடிநீர் தேவைக்கு, பெரியாறு அணையை நம்பியுள்ளன. தேனி மாவட்டங்களிலுள்ள நகரப்பகுதிகள், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வைகை ஆற்றில் கிணறுகள் அமைத்து, குழாய்கள் மூலம் பம்ப் செய்து, குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

மாற்று வழி: பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்கென தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்படும் சமயங்களில், மாற்று உத்திகளை கையாள்வது குறித்து, குடிநீர் வாரியத்தின் 'குடிநீர் ஆதாரம் கண்டறியும் பிரிவு' ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பெரியாறு அணையில் இருந்து மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு ஆண்டிற்கு எவ்வளவு குடிநீர் எடுக்கப்படுகிறது என்ற கணக்கு விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்கு எடுக்கும் நீரை, மாற்று வழி யில் எவ்வாறு சேகரம் செய்வது, அதற்கான குடிநீர் ஆதாரங்கள் மாவட்டத்தில் எங்கெங்கு உள்ளது என பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இதில் ஹைவேவிஸ் அணை தண்ணீரை தேனி நகரம் மற்றும் மாவட்டத்திலுள்ள பெரும்பகுதிக்கு பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்றுத் திட்டம் தயாரிக்க முடிவு செய்துள் ளோம். ஹைவேவிஸ், மணலாறு அணைகளில் தேங்கும் நீரின் அளவு, சுருளியாறு மின்நிலைய பகுதியில் உள்ள காட்டோடைகளில் வரும் நீரின் அளவு ஆகியவை ஆய்வில் இருக்கிறது. ரிசர்வ் பாரஸ்ட் பகுதிகளாக இருப்பதால், வனத்துறையின் முன் அனுமதி கோரப்படும்.

அது தவிர சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு, மூல வைகை போன்ற இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.குடிநீர் தேவையை சமாளிக்க தேனி மாவட்டத்தில் போதிய அளவு குடிநீர் ஆதாரங்கள் உள்ளது. இவற்றை முறையாக பயன்படுத்தினால், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்றார.

Last Updated on Tuesday, 30 March 2010 10:06
 

குடியாத்தம் குடிநீர் பிரச்னை தீர ரூ.10 கோடி ஒதுக்க வேண்டும்

Print PDF

தினமணி 29.03.2010

குடியாத்தம் குடிநீர் பிரச்னை தீர ரூ.10 கோடி ஒதுக்க வேண்டும்

வேலூர், மார்ச் 28: குடியாத்தம் சட்டப் பேரவை தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கான திட்டங்களுக்காக ரூ.10 கோடி ஒதுக்க வேண்டுமென அத்தொகுதி எம்எல்ஏ ஜி.லதா, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வருக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அனுப்பிய மனு விவரம்:

குடியாத்தம் சட்டப் பேரவை தொகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. குடிநீருக்கு அவதியுறும் நிலையுள்ளது. குடியாத்தம் நகரில் உள்ள 400 ஆழ்துளை கிணறுகளில் 250-க்கும் மேற்பட்டவை வற்றிவிட்டன.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மோர்தானா அணையை திறந்து விட்டதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியாத்தம் பகுதியில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்னையை போக்க பசுமாத்தூர் பாலாறு படுகையில் நீர் உறிஞ்சி கிணறுகள் அருகே அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை ரத்து செய்ய வேண்டும்.

பசுமாத்தூர் தலைமை நீரேற்று நிலையத்தில் புதிதாக 3 நீர்உறிஞ்சி கிணறுகள், மின்மோட்டார், பைன் லைன்கள் அமைக்க ரூ.40 லட்சம், மாதனூர் பாலாற்றங்கரையில் புதியதாக 3 நீர் உறிஞ்சி கிணறுகள் அமைக்க ரூ.30 லட்சம், மாதனூரில் 5, பீமன்பட்டியில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்க ரூ.7 லட்சம், மின் மோட்டார்கள், 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு பைப் லைன்கள் அமைத்திட ரூ.63 லட்சம், பாக்கம் குடிநீர் மேம்பாட்டு திட்டம் கீழ் 5 ஆழ்துளை கிணறுகள், மின் மோட்டார்கள், 3.5 கிலோ மீட்டர் பைப் லைன்கள் அமைக்க ரூ.20 லட்சம்,

குடியாத்தம் நகரம், ஊராட்சிப் பகுதிகளில் நூறு ஆழ்துளை கிணறுகள் அமைக்க ரூ.1 கோடி, மோர்தானா அணையில் இருந்து நீர் உறிஞ்சி கிணறுகள் அமைத்து, குழாய் மூலம் நகராட்சி பகுதிகளுக்கும், ஊராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க ரூ.2.50 கோடி, குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்ற ரூ.5 கோடி என மொத்தம் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.

Last Updated on Monday, 29 March 2010 10:39
 


Page 282 of 390