Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீரில் குளோரின் கலக்கும் நிலையம்

Print PDF

தினமணி 29.03.2010

குடிநீரில் குளோரின் கலக்கும் நிலையம்

கடலூர், மார்ச் 28: கடலூர் நகராட்சியால் ரூ.10 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட குடிநீருக்கு குளோரின் கலக்கும் நிலையம், 2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது.

÷கடலூர் மஞ்சக்குப்பம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே, 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நகராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கிருந்துதான் மஞ்சக்குப்பம் பகுதி முழுவதற்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

÷குடிநீரை சுத்திகரித்து வழங்க அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் தொட்டியில் கலக்கப் படுகிறது. இதை எளிதாகவும் சரியான அளவிலும் செய்வதற்காக குடிநீரில் குளோரின் வாயு கலக்கும் இயந்திரம் 2 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது.

குளோரின் வாயு சிலிண்டர்களைக் கொண்டு வந்து பொருத்தி, அதில் இருந்து குளோரின் வாயு, குடிநீர் பகிர்மானக் குழாயுடன் இணைக்கப்பட்டு உள்ளது. ÷இந்த இயந்திரம் தற்போது செயலற்று மூடிக்கிடக்கிறது. இதற்கான அறை மூடப்பட்டு இருக்கிறது. இந்த இயந்திரம் பொருத்தப்பட்டு சில நாள்களே செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது நகராட்சி ஊழியர்கள் நேரடியாக பிளீச்சிங் பவுடரைக் கலக்கி வருகிறார்கள். இது குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பதில்லை. சில நேரங்களில் அதிக அளவில் பிளீச்சிங் பவுடர் கலந்து விடுவதால் நகராட்சிக் குடிநீரைக் குடிப்பதற்கு சிரமமாக இருக்கும்.

÷இதுகுறித்து நகராட்சிப் பொறியாளர் சந்திரமனோகரனிடம் கேட்டதற்கு, குளோரின் வாயு செலுத்தும் இயந்திரம் இயங்கவில்லை.

மும்பையைச் சேர்ந்த நிறுவனம்தான் அதைச் சீரமைக்க முடியும். அரசுக்கு எழுதி இருக்கிறோம். சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது கையினால்தான் பிளீச்சிங் பவுடரைக் கலக்குகிறோம் என்றார்.

Last Updated on Monday, 29 March 2010 10:29
 

குடிநீர் குழாய் இணைப்பு தொடக்கம்

Print PDF
தினமணி 29.03.2010

குடிநீர் குழாய் இணைப்பு தொடக்கம் புதுச்சேரி

, மார்ச் 28: புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு தொடக்க விழா நடைபெற்றது.

÷அரும்பார்த்தபுரம் திரெüபதி அம்மன் கோயில் திடலில் நடைபெற்ற விழாவில் பொது சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் இதனை இயக்கி தொடங்கி வைத்தார். ÷

மேலும் ராதாகிருஷ்ணன் நகர், என்.எஸ் நகர், நடராஜன் நகர், தட்டாஞ்சாவடி, வி.மணவெளி ஆகிய பகுதிகளிலும் ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் குழாய் இணைப்பை அமைச்சர் தொடங்கி வைத்தார். ÷கல்மேடுபேட்டை, கண்ணதாசன் நகர், வி.மணவெளி ஆகிய பகுதிகளில் தார் சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் பல்வேறு இடங்களில் வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

÷உழவர்கரை நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீóத்தாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 29 March 2010 10:25
 

துறையூரில் குடிநீர் கட்

Print PDF

தினமலர் 29.03.2010

துறையூரில் குடிநீர் கட்

துறையூர்:துறையூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் நாளை (30ம் தேதி) முதல் நான்கு நாட்களுக்கு விநியோகம் இருக்காது.இதுகுறித்து நகராட்சி ஆணையர் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது: முசிறி அய்யம்பாளையம் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தெப்ப திருவிழா நாளை முதல் வரும் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் வழக்கம்போல் மேற்கண்ட நாட்களில் காவிரி குடிநீர் விநியோகம் துறையூர் நகராட்சி பகுதியில் இருக்காது என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Last Updated on Monday, 29 March 2010 06:11
 


Page 283 of 390