Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் குடிநீர் குழாய் உடைப்பு சீரானது

Print PDF

தினமலர் 25.03.2010

அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் குடிநீர் குழாய் உடைப்பு சீரானது

அவிநாசி: அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன் ஏற்பட்டிருந்த இரண்டாவது திட்ட குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது; தற்போது, வினியோகம் துவங்கியுள்ளது.திருப்பூருக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் இரண்டாவது குடிநீர் திட்ட குழாயில், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன் உடைப்பு ஏற்பட்டது. கடந்த 21ம் தேதி ஏற்பட்ட உடைப்பை அடுத்த இரு நாட்களில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பணியாளர்கள் சரி செய்தனர். உடைப்பு ஏற்பட்ட பகுதியில் 22 அடி ஆழத்துக்கு பொக்லைன் மூலம் ராட்சத குழி தோண்டப்பட்டு, உடைப்பு சரி செய்யப்பட்டது.

இதனால், காலதாமதம் ஏற்பட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி, வழியோர கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் என்று பலரும் பாதிக்கப்பட்டனர்.உடைப்பு சரி செய்யப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து தண்ணீர் 'பம்ப்' செய்யப்பட்டது. நேற்று முதல் வழக்கமான வினியோகம் தொடர்ந்தது. குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் (திருப்பூர் - மேட்டுப்பாளையம் இரண்டாவது குடிநீர் திட்டம்) செந்தில்நாதன் கூறியதாவது:

அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன்புறம் ஏற்பட்ட உடைப்பை இரண்டு முறை சரி செய்தோம். அப்பகுதியில் அதிகளவில் பஸ்கள் வந்து செல்வதாலும், பதிக்கப்பட்ட கான்கிரீட் குழாய்க்கு மேற்பகுதியிலுள்ள மண்ணின் தன்மை இளகி விட்டதாலும், அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது.இதை முற்றிலுமாக தவிர்க்கும் பொருட்டு, தற்போதுள்ள குழாயை எதிர்ப்புற பகுதிக்கு மாற்றியமைப்பது குறித்து உயரதிகாரிகளுடன் பேசி வருகிறோம். இதற்கான மதிப்பீடும் தயார் செய்யப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி வந்ததும் பணிகள் துவங்கி விரைவாக முடிக்கப்படும். கோடை காலத்தை சமாளிக்க, அனைத்து முன்னேற்பாடுகளை யும் குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டு செய்து வருகிறது, என்றார்.குழாய் உடைப்பு சீரானதையடுத்து அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் நேற்று காலை முதல் குடிநீர் வினியோக பணி துவங்கியது.

Last Updated on Thursday, 25 March 2010 10:02
 

திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் ஜூனில் நிறைவு செய்ய அதிகாரிகள் முடிவு

Print PDF

தினமலர் 24.03.2010

திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் ஜூனில் நிறைவு செய்ய அதிகாரிகள் முடிவு

உடுமலை: 'உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்கள் மற்றும் நான்கு பேரூராட்சிகள் பயன் பெறும் புதிய திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட பணியை, வரும் ஜூனில் நிறைவு செய்து, குடிநீர் வினியோகம் துவக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். அமராவதி ஆற்றின் மூலம், மானுப்பட்டி - ஜோதிபாளையம் மற்றும் மடத்துக்குளம் பேரூராட்சி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் கண்ணாடிப்புத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டங்கள், கணியூர் பேரூராட்சி, ஜோத்தம்பட்டி ஊராட்சிகளுக்கு, கணியூர் கூட்டுக்குடிநீர் திட்டம், மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் தாமரைப்பாடி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் கல்லாபுரம், சங்கராமநல்லூர் பேரூராட்சி, கொழுமம் ஊராட்சி, கொமரலிங்கம் பேரூராட்சி உட்பட வழியோரங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஆற்றில் இருந்து நேரடியாக குடிநீர் பெற்று வருகின்றன.

அமராவதி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதில்லை. பல ஆண்டுகளாக ஆற்றில் மணல் வளமும் சுரண்டப்படுவதால், ஆண்டுதோறும் பல மாதங்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை. இதனால், புதிய திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டது. தமிழக அரசு, 28.78 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. திருமூர்த்தி அணை - தளி கால்வாயில், தினமும் 13.81 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து வினியோகம் செய்யப்பட உள்ளது. குடிநீர் திட்ட பணிகள், 2009 மார்ச்சில் துவங்கியது. 18 மாதம் திட்ட காலமாக கொண்டு, 2010 அக்., மாதத்துக்குள் பணி நிறைவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. திருமூர்த்தி அணையில் தண்ணீர் எடுக்கும் வகையில் பம்ப்பிங் ஸ்டேஷன், மெதுமணல் தொட்டிகள் உட்பட நவீன சுத்திகரிப்பு நிலையம், 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஊரக பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்ல, 38 கி.மீ., நீளமுள்ள பெரிய அளவிலான குழாய்கள் அமைக்கும் பணி, 127 கி.மீ., நீளத்துக்கு சிறிய அளவிலான குழாய்கள் பதிக்கும் பணி துவங்கியது. இப்பகுதிகளில், ஏற்கனவே உள்ள 120 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுடன், புதிதாக ஐந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் பிரித்து வழங்கும் குழாய்களும், சிறிய அளவிலான பம்ப்பிங் ஸ்டேஷன் பணிகளும் ஓரளவு நிறைவு பெற்றுள்ளது. துவங்கியது முதலே திட்டப்பணிகள் முழுவீச்சில் நடந்ததால், தற்போது 90 சதவீதம் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தாண்டு பருவமழை பொய்த்து, ஐந்து மாதமாக மழை இல்லாததால், அமராவதி அணை வறண்டு, வழியோர கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக் கும் வகையில், புதிய திருமூர்த்தி திட்ட பணிளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மேலும் தீவிரப் படுத்தியுள்ளனர். வரும் ஜூன் மாதத்துக்குள் பணிகள் நிறைவு செய்யப்படும் எனவும், இதற்கு முன்னதாகவே குடிநீர் திட்டத்தின் வெள்ளோட்டம் துவங்கும் வாய்ப் புள்ளதாகவும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Wednesday, 24 March 2010 10:36
 

குடிநீரை வீணாக்காத நகரமாக சென்னை சாதனை

Print PDF

தினமலர் 23.03.2010

குடிநீரை வீணாக்காத நகரமாக சென்னை சாதனை

புதுடில்லி : குடிநீரை வீணாக்குவதில் டில்லி முதலிடத்திலும், அடுத்து பெங்களூரு நகரமும் உள்ளது; வீணாக்காத நகரமாக சென்னை சாதிக்கிறது.

மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சமீபத்தில், முக்கிய நகரங்களில் சுகாதாரம் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்த சர்வே நடத்தியது. சென்னை உட்பட 28 நகரங்களில் இந்த சர்வே நடந்தது; குடிநீரை வீணாக்குவதில் ஏழு மெகா நகரங்களில் முதலில், நாட்டின் தலைநகரான டில்லி இருப்பது தெரியவந்துள்ளது. அடுத்தபடியாக பெங்களூரு நகரம் உள்ளது.ஏழு மெகா நகரங்களான டில்லி, பெங்களூரு, மும்பை, கோல்கட்டா, சென்னை, ஐதராபாத் மற்றும் ஆமதாபாத் நகரங்களில் நடத்தப்பட்ட சர்வேயில் நகரங்கள் வாரியாக 13 சதவீதத்தில் இருந்து 52 சதவீதம் வரை தண்ணீரை வீணாக்குகின்றன. டில்லியில் 52.4 சதவீத குடிநீர் வீணாக செலவாகிறது.

பெங்களூரு நகரத்தில் 50.9 சதவீத தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. இங்குள்ள மக்களில் பாதி பேர் குழாய் தண்ணீரை நம்பியும், பாதிபேர் கிணற்று மற்றும் ஆழ்குழாய் தண்ணீரையும் நம்பியும் இருக்கின்றனர். இந்த பட்டியலில், குடிநீரை வீணாக்காமல் மும்பை நகரம் சாதிக்கிறது: 13 சதவீத தண்ணீரை தான் அது வீணாக்குகிறது; இந்நகரம் கடைசி இடம் பெறுகிறது; பட்டியலில் இதற்கு முன்பாக உள்ள சென்னை நகரம், 17 சதவீத தண்ணீரை மட்டுமே வீணாக்குகிறது.

Last Updated on Tuesday, 23 March 2010 07:39
 


Page 284 of 390