தினமணி 17.03.2010
பழனியில் 3 நாளுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்
பழனி, மார்ச் 16: பழனி நகரில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்து தெரிவித்துள்ளதாவது: பழனிக்கு குடிநீர் வழங்கும் கோடைகால நீர்த்தேக்கம் மற்றும் பாலாறு அணையில் குடிநீர் இருப்பு தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது.
இந்த காரணத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழனி நகருக்கு வரும் 17-ம் தேதி முதல் 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.