Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

வந்தவாசி நகராட்சி பகுதிக்கு ரூ. 8 கோடியில் குடிநீர் திட்டம்

Print PDF

தினமலர் 11.03.2010

வந்தவாசி நகராட்சி பகுதிக்கு ரூ. 8 கோடியில் குடிநீர் திட்டம்

வந்தவாசி : வந்தவாசி நகராட்சி பகுதிக்கு, குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கையை நகராட்சி உறுப்பினர்களுக்கு விளக்குவதற்கான ஆலோசனை கூட்டம் நகராட்சி வளாகத் தில் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் சீனுவாசன் தலைமை வகித்தார். கமிஷனர் சசிகலா முன்னிலை வகித்தார்.

இதில் எஸ்பிடி., கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன மேலாண்மை இயக்குனர் சென்பகநாதன், இணை இயக்குனர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து விளக்கினர். இதில் அவர்கள் குறிப்பிட்டதாவது:வந்தவாசி நகருக்கு வரும் 30 ஆண்டுகளை கணக்கில்கொண்டு அன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப, ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிதண்ணீர் கிடைக்கும் வகையில் இத்திட்டம் இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போது வந்தவாசி நகருக்கு குடிநீர் எடுத்து வரும் செய்யாறு ஆற்றில் இருந்துதான் இந்த திட்டத்துக்கும் புதிதாக 4 கிணறுகள் தனித்தனியாக அமைத்து, அதன் மூலம் 17 கி.மீ., தூரத்துக்கான பைப் லைன் (செய்யாறு ஆற்றில் இருந்து வந்தவாசி வரை) அமைத்து, வந்தவாசி நகரில் உள்ள 24 வார்டுகளுக்கும் சீரான முறையில் குடிநீர் கிடைக்கும்படி புதிதாக 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட இடங்களில் தேவைக்கு அதிகமாகவே குடிநீர் கிடைக்கும்.இவ்வாறு பேசினர்.நிகழ்ச்சியில், நகராட்சி கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், அன்சாரி, உசேன், சம்சேந்திரன், ஜலால், பழனியம்மாள், அன்பழகி, வேலன், முத்து, நவாப்ஜான், தானியலட்சுமி, பிச்சைமணி, செல்வம், ரசீத் ஆகியோர் கலந்துகொண்டு திட்டங்களின் பயன்களை கேட்டறிந்தனர்.நகராட்சி பொறியாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்

Last Updated on Thursday, 11 March 2010 06:58
 

நகராட்சி குடிநீர் பைப் லைன் சீரமைப்பு : கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Print PDF

தினமலர் 11.03.2010

நகராட்சி குடிநீர் பைப் லைன் சீரமைப்பு : கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி பைப் லைன் சீரமைக்கும் பணியை கலெக்டர் பார் வையிட்டார்.

விழுப்புரம் நகர மக்களுக்கு நகராட்சி சார்பில் எல்லிஸ் சத்திரம் அணைக் கட்டு பகுதியில் போர் வெல் அமைத்து பைப் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. கடந்த 7ம் தேதி எல்லிஸ் பம்ப் ஹவுசிலிருந்து வரும் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் நகருக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப் பட்டது. நகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் பைப் லைனில் தற்காலிகமாக சிமென்ட் வைத்து அடைத்து சீரமைத்தனர். பின் தண்ணீரை பம்ப் செய்த போது மீண்டும் அதே பகுதியில் உடைப்பு ஏற்பட் டது. குழாய் உடைப்பு ஏற் பட்ட இடத்தை பார்வையிட்ட நகர் மன்ற சேர்மன் ஜனகராஜ் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற் கொள்ளுமாறு நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கலெக்டர் பழனிசாமி நேற்று காலை பைப்லைன் உடைப்பு ஏற்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டார். பிரச்னை குறித்து நகராட்சி கமிஷனர் சிவக்குமார், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் அமல்ராஜ், ராஜகுமாரன் ஆகியோர் கலெக்டரிடம் விளக்கினர். பழுதடைந்த குழாய்ககளை சீரமைத்து குடிநீர் சப்ளை வழங்கிட துரித நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி கமிஷனரிடம் கலெக்டர் கூறினார். குடிநீர் குழாய் பழுது நீக்கப்பட்டு நேற்று மாலை 5.30 மணியளவில் குடிநீர் சப்ளை துவங்கியது.

Last Updated on Thursday, 11 March 2010 06:53
 

மேட்டூர் அணை: குடிநீருக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிப்பு

Print PDF

தினமணி 10.03.2010

மேட்டூர் அணை: குடிநீருக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிப்பு

மேட்டூர், மார்ச் 9: மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவு விநாடிக்கு 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் பாசனக் கால்வாய் பகுதியில் உள்ள மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,900 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. செவ்வாய்க்கிழமை காலை முதல் இது விநாடிக்கு 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.12 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,540 கன அடிவீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. நீர் இருப்பு 36.34 டி.எம்.சி யாக இருந்தது.

Last Updated on Wednesday, 10 March 2010 09:24
 


Page 291 of 390