Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

புதியம்புத்தூரில் குடிநீர் தொட்டி திறப்பு விழா

Print PDF

தினமலர் 06.03.2010

புதியம்புத்தூரில் குடிநீர் தொட்டி திறப்பு விழா

புதியம்புத்தூர் : புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் தொட்டி திறக்கப்பட்டது.புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெண்கள் பிரசவத்திற்காக 24மணி நேரம் செயல்பட்டு வருகிறது. தற்சமயம் ஏற்பட்டுள்ள வைரஸ் காய்ச்சலினால் அதிகமான நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு குடிப்பதற்கு போதுமான குடிநீர் வசதி இல்லாமல் இருந்தது. எனவே மாவட்ட சுகாதார துறை மாவட்ட கலெக்டரிடம் குடிநீர் தொட்டி நிறுவ கேட்டிருந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் மூலம் புதியம்புத்தூர் வாட்டர் டேங்கிலிருந்து தனியாக பைப் லைன் அமைத்து ஆஸ்பத்திரி அருகே 200 லிட்டர் சின்டெக்ஸ் வாட்டர் டேங் அமைத்து குடிநீர் நல்லி அமைத்திருந்தனர். புறநோயாளிகளின் நலனுக்காக இந்த குடிநீர் தொட்டி திறப்பு விழா ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் ஜானகிராமன், உதவிப்பொறியாளர் விஸ்வலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதியம்புத்தூர் பஞ்.,தலைவர் ஜெபராஜ் குடிநீர் தொட்டி நல்லியை திறந்து வைத்தார். விழாவில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் சுடலைமணி, ஜெனோவா, செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 06 March 2010 10:14
 

பெங்களூரில் போக்குவரத்து, குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 06.03.2010

பெங்களூரில் போக்குவரத்து, குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

பெங்களூர், மார்ச் 5: பெங்களூரில் போக்குவரத்து மற்றும் குடிநீர், வடிகால் வசதிகளை மேம்படுத்த ரூ.18,872 கோடி ஒதுக்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்வர் எடியூரப்பா அறிவித்தார்.

நகரம் முழுவதும் மெட்ரோ ரயில், மோனோ ரயில் மற்றும் நல்ல சாலைகள் மூலம் போக்குவரத்தை மேம்படுத்தவும், குடிநீர் சப்ளை மற்றும் வடிகால் வசதிகளை மேம்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.18,872 கோடி செலவிடப்படும். பெங்களூரில் இருந்து உள்ளூர், புறநகர் ரயில் சேவைகளைத் துவக்க தேவையான மொத்த நிதியில் 50 சதவீதத்தை ரயில்வே துறைக்கு மாநில அரசு வழங்கும்.

பெங்களூர் அபிவிருத்தி ஆணையம் மூலம் நகரில் பல அடுக்கு மாடிகொண்ட வாகன நிறுத்தும் மையங்களை கட்டவும், 10 போக்குவரத்து வழித்தடங்களை மேம்படுத்தவும் மொத்தம் ரூ.1000 கோடி செலவிடப்படும். நகரில் உள்ள 25 ஏரிகளை மேம்படுத்த ரூ.200 கோடி செலவிடப்படும். நகர சாலைகள், நடைபாதைகளை மேம்படுத்தவும், மேம்பாலங்கள், சுரங்கப் பாலங்கள் கட்ட ரூ.3 ஆயிரம் கோடி செலவிடப்படும்.

மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் வடிகால் வசதிகளை செய்ய ரூ.425 கோடி செலவிடப்படும். நகரின் பழைய பகுதிகளில் பழுதான குடிநீர், வடிகால் குழாய்களை மாற்ற ரூ.100 கோடி செலவிடப்படும்.

நகர்ப்புற வளர்ச்சிக்கு முக்கியமந்திரி நகரோதனா யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.600 கோடி ஒதுக்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் 7 மாநகராட்சிகள், 44 நகராட்சிக் கவுன்சில்கள், 94 டவுன் நகராட்சி கவுன்சில்கள் மற்றும் 68 டவுன் பஞ்சாயத்துக்கள் வளர்ச்சிகளுக்கு குறிப்பிட்ட நிதி செலவிடப்படும்.

மாநிலத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களுக்கு போதுமான குடிநீர் வழங்க ரூ.304 கோடி செலவிடப்படும். 120 டவுன்களில் குடிநீர் விநியோக திட்டம் நீட்டிக்கப்படும். குல்பர்கா, ஹூப்ளி, பெல்காம் நகரங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் 24 மணி நேர குடிநீர் விநியோக திட்டம் மேலும் 16 நகரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

ஹூப்ளி-தார்வாட் நகரங்களுக்கு இடையே நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.50 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. யாதகிரி புதிய மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.25 கோடியும், 75-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் உடுப்பி நகராட்சிக் கவுன்சிலுக்கு ரூ.25 கோடியும், விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வு மையம் துவங்க ரூ.5 கோடியும் ஒதுக்கப்படும்.

Last Updated on Saturday, 06 March 2010 10:13
 

குடிநீர் வடிகால் வாரியம் வசூலிக்கும் "சென்டேஜ்' தொகை திடீர் குறைப்பு

Print PDF

தினமணி 04.03.2010

குடிநீர் வடிகால் வாரியம் வசூலிக்கும் "சென்டேஜ்' தொகை திடீர் குறைப்பு

மதுரை, மார்ச் 3: குடிநீர்த் திட்டப் பணிகளை நிறைவேற்றும் போது குடிநீர் வடிகால் வாரியத்தால் வசூலிக்கப்படும் சென்டேஜ் (நிர்வாகச் செலவுகக்கான) தொகை 5 சதமாக குறைக்கப்பட்டுள்ளதால் பொறியாளர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு கமிட்டிகளின் பரிந்துரைப்படி, மாநிலங்களில் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டங்களைத் திட்டமிடுதல், வடிவமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படும் வகையில், மாநில அளவில் ஒரு தன்னாட்சி மற்றும் சுயசார்புத் தன்மையுடைய அமைப்பை உருவாக்கும் நோக்குடன், தமிழகத்தில் 1971}ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பின் செயல்பாடுகளை வரையறுக்க தனிச் சட்டமும் உருவாக்கப்பட்டது. இது ஒரு பொதுத் துறை நிறுவனம் மட்டுமின்றி, தொழில் நிறுவனமும்கூட. இதில், தலைமைப் பொறியாளர்கள் முதல் அலுவலக உதவியாளர் வரை சுமார் 6 ஆயிரம் பணியாளர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.

இந்த வாரியத்தின் நிர்வாகச் செலவுக்காக (சென்டேஜ்) அதாவது, பணியாளர்கள் சம்பளம், அகவிலைப் படி, ஓய்வூதியம் உள்ளிட்ட செலவினங்களுக்காக இந்த வாரியம் மேற்கொள்ளும் திட்டங்களின் மதிப்பீட்டைப் பொருத்து திட்ட மதிப்பீட்டில் 18.5 சதம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த 18.5 சதம் சென்டேஜ் தொகையில் திட்டங்களை செயல்படுத்துவோரின் நிர்வாகச் செலவுக்கு 10 சதம், ஓய்வூதியத்துக்காக 1.5 சதம், திட்ட மதிப்பீடு தயாரித்தலுக்காக 2.5 சதம், தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் சரிபார்க்க 0.5 சதம், தணிக்கை மற்றும் கணக்கு ஆகியவற்றுக்காக 1.0 சதம் என பிரித்துக் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த சென்டேஜ் தொகை படிப்படியாக குறைக்கப்பட்டு, நடப்பாண்டில் (2010) 5 சதமாக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவால் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், அகவிலைப் படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர வாரியத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வடிகால் வாரியத்தின் வளர்ச்சி இந்த நடவடிக்கையால் பாதிக்கும் என, தொழிற்சங்கங்கள் கருத்துக் கூறி, எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் பாதாளச் சாக்கடை வாரியப் பணியாளர்கள் கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் கே.கே.என். ராஜன் கூறியது:

உள்ளாட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் கட்டணமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வரவேண்டிய சுமார் ரூ.300 கோடி நிலுவை உள்ளதை வசூலிக்க வாரியம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

சென்டேஜ் தொகை பல்வேறு கட்டங்களாகக் குறைக்கப்பட்டு தற்போது 5 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வாரியத்துக்கு சுமார் ரூ.1,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதுதவிர, ஆண்டுக்கு தொடர் வருவாய் இழப்பாக சுமார் ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படும். இதனால், பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது.

எனவே, குடிநீர் வாரியத்தைப் பலப்படுத்த சென்டேஜ் தொகையை உயர்த்தி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 04 March 2010 10:54
 


Page 293 of 390