Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

துணை முதல்வருக்கு 'பறந்தது' கடிதம் குடிநீர் பிரச்னையை தீர்க்க முறையீடு

Print PDF

தினமலர் 04.032010

துணை முதல்வருக்கு 'பறந்தது' கடிதம் குடிநீர் பிரச்னையை தீர்க்க முறையீடு

திருப்பூர்:"பொதுமக்களின் தாகத்தை தணிக்க, 20 லட்சம் லிட்டர் குடிநீராவது கூடுதலாக வழங்க வேண்டும்' என, துணை முதல்வருக்கு, நல்லூர் நகராட்சி யில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள் ளது. கூடுதல் குடிநீர் கிடைத்தால் மட்டுமே 1.10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொட்டிகள் பயன்பாட்டுக்கு வரும்.நல்லூர் நகராட்சி பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நகராட்சிக்கு என தனியாக பராமரிக்கப்படும் குடிநீர் திட் டங்கள் இல்லை. இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து 4.16 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.குடிநீர் பற்றாக்குறை காரணமாக, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்திடம், ஒப்பந்த விலையில் 2.058 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்படு கிறது. ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 90 லிட்டர் குடிநீர் வினியோகிக்க வேண் டும்; தற்போது 43 லிட்டரே வழங்கப் படுகிறது. ஒருவருக்கு 90 லிட்டர் வீதம் வழங்க, தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப, 43 லட்சம் லிட்டர் குடிநீர், சலுகை விலையில் அளிக்க கோரிக்கை வைக்கப் பட்டது.

சலுகை விலையில் கூடுதலாக குடிநீர் வினியோகிக்க இயலாது என, புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் கை விரித்து விட்டது."கூடுதலாக 43 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க இயலாவிட்டால், குறைந்தபட்ச மாக, 20 லட்சம் லிட்டராவது உடனடி யாக வழங்க வேண்டும்; கூடுதலாக வழங்கப் படும் குடிநீருக்கு பேச்சு மூலம் அரசு நிர்ணயிக்கும் தொகை செலுத்தப் படும். அதுவரை, தற்போதைய சலுகை விலையில் குடிநீர் வழங்குங் கள்; வித்தியாச தொகையை அரசு கட்டணம் நிர் ணயித்ததும் செலுத்து கிறோம்' என்று புதிய திருப்பூர் மேம் பாட்டு கழகத்திடம் மீண்டும் வலியுறுத் தப்பட்டது; அங்கிருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், நல்லூர் நகராட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை பட்டிய லிட்டு, துணை முதல்வர் ஸ்டாலினுக் கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நகராட்சி தலைவி விஜயலட்சுமி கடிதம் எழுதியுள்ளார்.அதில், "நல்லூர் நகராட்சியில், தற்போது 12 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்படுகிறது; பற்றாக்குறை யால் பொதுமக்கள் அவதிப்படுகின்ற னர். ஏழாவது வார்டில் ரூ.1.10 கோடி மதிப்பில் ஐந்து லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி, கீழ்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகிக்க, புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் கூடுதலாக குடிநீர் வழங்க உத்தரவிட வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 04 March 2010 07:04
 

மே 27-க்குள் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: வாரியம் முடிவு

Print PDF

தினமணி 03.03.2010

மே 27-க்குள் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: வாரியம் முடிவு

பெங்களூர், மார்ச் 2: மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்தும் நோக்கில் வரும் மே 27-ம் தேதிக்குள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதிகள் ஏற்படுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.

காவிரி ஆற்றுநீர், திப்பகொண்டனஹள்ளி ஏரி, அர்காவதி ஏரி போன்ற நீர் ஆதாரங்கள் மூலம் பெங்களூரின் 60 சதவிகித மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 40 சதவிகித மக்கள், குடிநீருக்காக நிலத்தடி நீரையே நம்பியுள்ளனர். இப்புள்ளி விவரங்கள் பெங்களூரைச் சேர்ந்த சென்டர் ஃபார் சிம்பையாசிஸ் ஆஃப் டெக்னாலஜி, என்வரான்டெண்ட் மேனேஜ்மெண்ட் (எஸ்.டி..எம்.) என்ற ஆராய்ச்சி அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளன.

நகரில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்துகொண்டே செல்கிறது. மழைநீர் நிலத்தடியில் செல்லாததுதான் நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கு ஒரு காரணமென கூறப்படுகிறது.

மழைக்காலங்களில் மழைநீரை வீணாக்காமல் முறையாக சேகரித்து நிலத்துக்கு அடியில் செல்லும் வகையில் செய்தால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் வீடுகளில் மழைநீரை போதிய அளவு சேகரித்து வைத்தால் குடிநீர்ப் பற்றாக்குறை காலங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைக் கருத்தில் கொண்டு மழைநீர் சேகரிப்பு கட்டாய சட்டத்தை கடந்த ஆண்டில் அரசு கட்டாயமாக்கியது.

இருப்பினும் பல கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே இவ்வசதியை ஏற்படுத்த கடும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.

இதுகுறித்து பெங்களூர் குடிநீர் விநியோக மற்றும் வடிகால் வாரிய செய்தித் தொடர்பாளர் ஏ.என். பிரஹலாத் ராவ் நமது நிருபரிடம் கூறியது: மழைநீரை கட்டாயம் சேகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்காக பெங்களூர் வாட்டர் சப்ளை மற்றும் சேவேஜ் 1964-ம் ஆண்டு சட்டத்தில் 72ஏ சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்டு 2009-ம் ஆண்டு சட்டத் திருத்தமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின்கீழ் நகரில் வசிப்போர் தங்களது கட்டடங்களின் மீது பெய்யும் மழையை முறையாக சின்டெக்ஸ் தொட்டிகளில் சேகரிக்க வேண்டும். நிலத்தில் தொட்டி கட்டி அதில், சேகரிக்கப்பட்ட மழைநீர் வந்து விழும் வண்ணம் குழாய்கள் பதிக்க வேண்டும்.

2400 சதுர அடி பரப்பளவு அல்லது அதற்கு மேல் உள்ள பழைய கட்டடங்களிலும் 1200 சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்படும் வீடுகளிலும் குறிப்பிட்ட விதிகளின்படி மழைநீர் சேகரிப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நகரில் சுமார் 60 ஆயிரம் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்படவில்லை என்று கண்டறிந்துள்ளோம்.

எனவே, சட்ட விதிகளின்படி வரும் மே 27-ம் தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு வசதியை பழைய, புதிய வீடு, கட்டடங்களின் உரிமையாளர் ஏற்படுத்த வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யவில்லை என்றால் கட்டடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார் அவர்.

Last Updated on Wednesday, 03 March 2010 09:50
 

குடிநீர் பகிர்மான குழாய்க்கு அனுமதி

Print PDF

தினமலர் 03.03.2010

குடிநீர் பகிர்மான குழாய்க்கு அனுமதி

திருவண்ணாமலை : தி.மலை ராமமூர்த்தி நகரில் குடிநீர் பகிர்மான குழாய் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை நகராட்சியின் ஒருபுற எல்லையாக ராமமூர்த்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளன. இங்கு அதிகளவில் அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய்கள் கிடையாது. எனவே, இப்பகுதி மக்கள் குடிநீருக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், இங்கு ஒரு சில இடங்களில் மினி குடிநீர் தொட்டிகள் வைத்து அவற்றுக்கு லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. ஆனாலும் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.

எனவே, இந்த பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய் அமைப்பது குறித்து நகராட்சி சார்பில் திட்டம் தயார் செய்யப்பட்டது. ஆனால், குழாய் வரும் பாதையில் ரயில்வே "டிராக்' வருவதால், ரயில்வே துறை மூலம் அனுமதி பெற்றுத்தான் குழாய் பதிக்க முடியும்.இது தொடர்பாக, நகராட்சி மூலம் ரயில்வே துறை திருச்சி பிரிவு முதுநிலை மண்டல பொறியாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரயில்வே துறை மூலம் அதற்கான அனுமதி கடிதம் நகராட்சிக்கு வந்துள்ளது. அதில், 2 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயை இதற்காக ரயில்வே துறைக்கு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நகராட்சி மூலம் இந்த தொகை செலுத்தப்பட உள்ளது. எனவே, ராமமூர்த்தி நகர் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ளவர்கள் பயன்பெற வேண்டி, விரைவில் குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கப்பட உள்ளது.

Last Updated on Wednesday, 03 March 2010 07:11
 


Page 294 of 390