Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீருக்காக துணை முதல்வரை சந்திக்க திட்டம்

Print PDF

தினமலர் 20.02.2010

குடிநீருக்காக துணை முதல்வரை சந்திக்க திட்டம்

திருப்பூர் : நல்லூர் நகராட்சிக்கு தேவையான குடிநீர் கிடைக்காவிட்டால், அனைத்து கவுன்சிலர்களுடன் துணை முதல்வரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் தவிக்கின்றனர். புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்திடம் கூடுதலாக 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க, நகராட்சி நிர்வாகம் கோரியது. ஆனால், "குடிநீர் எடுத்து வருவதற்கு அதிக செலவு ஏற்படுகிறது; அதிக கட்டணம் செலுத்த வேண்டும்' என்று புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம் கூறி வருகிறது.கூடுதல் கட்டணம் அளிப்பது தொடர்பான பேச்சு, அரசுடன் நடந்து வருகிறது. பல மாதங்களாகியும், இதுவரை முடிவு எட்டப்படவில்லை. ஆனால், கூடுதல் கட்டணம் செலுத்தி குடிநீர் வாங்கினால், பொதுமக்கள் கட்டும் குடிநீர் கட்டணத்தை, பல மடங்கு உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படும்.அரசுடன் நடத்தப்படும் பேச்சு முடியும் வரை, நகராட்சிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் விலையில் கூடுதலாக குடிநீர் வழங்க வேண்டும். பேச்சு முடிவில் எட்டப்படும் தொகையை, கூடுதலாக அளித்து தண்ணீரை பெற்றுக்கொள்ளலாம் என்று நகராட்சி நிர்வாகம் கோரிக்கை வைத்தது. இக்கோரிக்கையை புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக்கழகம் ஏற்கவில்லை. இதனால், குடிநீர் பற்றாக்குறை தொடர்கிறது. மாதத்துக்கு சிலமுறை மட்டும் குடிநீர் வழங்கப்படுவதால், பொதுமக்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.கோடை காலம் நெருங்குவதால், குடிநீர் தேவை அதிகரிக்கும். இப்பிரச்னையால், ஆளுங்கட்சி மற்றும் கவுன்சிலர்களின் செல்வாக்கு மக்களிடையே குறையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதலாக குடிநீர் வழங்குவதற்காக, துணை முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகர், நகராட்சியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த போது, குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நகராட்சி தலைவர் விஜயலட்சுமி கூறியதாவது: குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கூடுதலாக 20 லட்சம் லிட்டர் தேவைப்படுகிறது. விலை நிர்ணயத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை தீர்வுக்கு கொண்டு வந்து கூடுதலாக குடிநீர் கிடைக்க, துணை முதல்வரை சந்திக்க திட்டமிடப்பட்டது.நல்லூர் நகராட்சிக்கு வந்த நகராட்சி கூடுதல் இயக்குனர் சந்திரசேகரிடம், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் கூடுதலாக குடிநீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கல் தொடர்ந்து நீடித்தால், அனைத்து கவுன்சிலர்களுடன் துணை முதல்வரை சந்தித்து குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தப்படும், என்றார

Last Updated on Saturday, 20 February 2010 06:57
 

கிருஷ்ணகிரி நகராட்சியில் குடிநீர்த் தொட்டி திறப்பு

Print PDF

தினமணி 19.02.2010

கிருஷ்ணகிரி நகராட்சியில் குடிநீர்த் தொட்டி திறப்பு

கிருஷ்ணகிரி, பிப்.19: கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 3-வது வார்டில் ரூ.1.2 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர்த் தொட்டியை நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் புதன்கிழமை தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட 3-வது வார்டு பகுதியில் உள்ளது பெங்காலி தெரு. இப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவையை போக்கும் வகையில், ஒருங்கிணைந்த வீடுகள் மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சி.வி.பௌலோஸ், பொறியாளர் சி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Friday, 19 February 2010 11:47
 

புதிய குடிநீர்த் திட்டத்துக்கு மதிப்பீடு செய்ய அரசுக்குப் பரிந்துரை

Print PDF

தினமணி 18.02.2010

புதிய குடிநீர்த் திட்டத்துக்கு மதிப்பீடு செய்ய அரசுக்குப் பரிந்துரை

தேனி, பிப்.17: தேனி- அல்லிநகரம் நகராட்சிப் பகுதி புதிய குடிநீர் திட்டத்துக்கு மதிப்பீடு செய்ய அரசுக்குப் பரிந்துரைத்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந் நகர்மன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவர் பழனிச்சாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைத் தலைவர் இலங்கேஸ்வரன், நகராட்சி ஆணையர் மோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேனி நகராட்சிப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முல்லைப் பெரியாறு அணையை நீர் ஆதாரமாகக் கொண்டு, லோயர்கேம்ப்பிலிருந்து புதிய குடிநீர்த் திட்டம் மூலம் குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு வர கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் தீர்மானித்திருந்தது.

இந் நிலையில், புதிய குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற நகர்மன்ற அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் லோயர்கேம்ப் குடிநீர்த் திட்டத்துக்கு மதிப்பீடு செய்ய அரசுக்குப் பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 


Page 298 of 390