Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் குழாயை மாற்றினால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் காரமடை பேரூராட்சி தலைவர் விளக்கம்

Print PDF

தினமலர் 17.02.2010

குடிநீர் குழாயை மாற்றினால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் காரமடை பேரூராட்சி தலைவர் விளக்கம்

மேட்டுப்பாளையம் : ""குடிநீர் குழாய் பதித்து 20 ஆண்டிற்கு மேலானதால், தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் அடிக்கடி உடைகிறது. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, அனைத்து குடிநீர் குழாயையும் மாற்ற வேண்டும்,'' என, காரமடை பேரூராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.காரமடை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 10 வார்டுகள் நகர் பகுதியிலும், எட்டு வார்டுகள் கிராமப்பகுதியிலும் அமைந் துள்ளன.

பவானி ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், சுத்தம் செய்து அனைத்து வார்டுகளுக்கும் சப்ளை செய்கின்றனர். குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், சீரான முறையில் தண்ணீர் சப்ளை செய்ய முடிவதில்லை. குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும், மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு குறித்து, பேரூராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:காரமடையில் உள்ள வார்டுகளில் சில இடங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாளும், சில இடங்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

பேரூராட்சியில் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், குடிநீரின் தேவையும் அதிகரித்தது. புதியதாக குடிநீர் திட்டம் அமைக்கக்கோரி குடிநீர் வடிகால் வாரியத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர்கள் புதியதாக உயர் அழுத்த மின் மோட்டார்களை மட்டும் வாங்கி கொடுத்தனர். அந்த மோட்டார் மூலம் தண்ணீர் பம்ப் செய்யும் போது, அடிக்கடி குடிநீர் குழாய் உடைகிறது. தற்போதுள்ள குடிநீர் திட்டம் 20 ஆண்டிற்கு முன் போடப்பட்டது. மண்ணில் புதைத்துள்ள குடிநீர் குழாய் "ஏசி குழாய்' புதிய மின் மோட்டார் மூலம் பம்ப் செய்யப்படும் தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் அடிக்கடி உடைகிறது. "ஏசி குழாய் தற்போது உற்பத்தி இல்லாததால், சிமென்ட் குழாய் பதித்து, அதன் மீது சிமென்ட் பூச்சு பூசி, காய்ந்த பிறகு தண்ணீர் விட இரண்டு நாட்கள் ஆகிறது. இதனால் ஏற்படும் குளறுபடியால் சில வார்டுகளுக்கு தண்ணீர் வர ஐந்து நாட்களுக்கும் மேலாகிறது. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அனைத்து குடிநீர் குழாயை மாற்றி, புதிய குடிநீர் திட்டம் அமைக்க வேண்டும். அரசுக்கு கோரிக்கை விடுக்க உள்ளோம். இவ்வாறு காரமடை பேரூராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் கூறினர்.

Last Updated on Wednesday, 17 February 2010 05:19
 

கொடைக்கானலில் விரைவில் தினசரி குடிநீர் விநியோகம்: துணை முதல்வர் பேச்சு

Print PDF
தினமணி 16.02.2010

கொடைக்கானலில் விரைவில் தினசரி குடிநீர் விநியோகம்: துணை முதல்வர் பேச்சு

கொடைக்கானல், பிப். 15: கொடைக்கானல் நகரில் விரைவில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கொடைக்கானல் நகராட்சி சார்பில் ரூ.5 கோடியே 5 லட்சம் செலவில் நவீன புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் வரவேற்றார். நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம் வாழ்த்துரை வழங்கினார்.

புதிய பஸ் நிலையத்தை துணை முதல்வர் திறந்து வைத்தார். அவர் பேசியதாவது:

கொடைக்கானலில் பல ஆண்டுகளாக பஸ் நிலையம் இல்லாத சூழ்நிலை இருந்தது. இதனால் பஸ்களை சாலை ஓரத்தில் நிறுத்திவைக்கும் நிலை இருந்ததால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன. பொதுமக்களுக்கு மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் பிரச்னையாக இருந்து வந்தது.

இதனைத் தீர்க்கும் வகையில், வெளிநாட்டினரும் ரசிக்கக் கூடிய வகையில் நவீன பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக, எனக்கு உள்ளாட்சித் துறை வழங்கப்பட்டது. மக்களுக்குத் துணை நிற்பதற்காக துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

கோட்டையில் மட்டுமே இருந்துகொண்டு மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது. நேரடியாக மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வருகிறேன். கடந்த 2006-ல் இந்த பஸ் நிலையத்துக்கு நான் அடிக்கல் நாட்டினேன். இப்போது திறப்பு விழா காணும்போது மகிழ்ச்சியடைகிறேன்.

திமுக ஆட்சியில் கொடைக்கானல் நகராட்சியில் ரூ.50 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 1383 பணிகள் எடுக்கப்பட்டு, இதுவரை ரூ.13 கோடியே 73 லட்சம் செலவில் 217 பணிகள் முடிவடைந்துள்ளன. நகரில் தினசரி குடிநீர் வழங்க குழாய்கள் அமைத்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ரூ.87 கோடியே 54 லட்சம் செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.எஸ்.வி.சித்தன், ஞானதேசிகன், நகராட்சி ஆணையர் விஜயகுமார், ஒன்றியத் தலைவர் அப்துல் ரசாக், நகர்மன்ற உறுப்பினர்கள், நகரச் செயலர் மாயன், மகளிர் சுய உதவிக் குழுவின உள்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார் நன்றி கூறினார்.

Last Updated on Tuesday, 16 February 2010 05:40
 

கிருஷ்ணா கால்வாயில் நீர்வரத்து அதிகரிப்பு: சென்னைக்கு குடிநீர் திறப்பு

Print PDF

தினமணி 15.02.2010

கிருஷ்ணா கால்வாயில் நீர்வரத்து அதிகரிப்பு: சென்னைக்கு குடிநீர் திறப்பு

திருவள்ளூர், பிப். 14: ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதையடுத்து, தற்போது கிருஷ்ணா கால்வாயில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.சென்னை குடிநீரின் முக்கிய ஆதாரமாகத் திகழ்ந்துவரும் பூண்டி ஏரியில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவந்தது.

இதையடுத்து, தமிழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில், கடந்த 30-ம் தேதி 1990 கன அடி நீர் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்டது.

திறக்கப்பட்ட நீர் கிருஷ்ணா கால்வாய் வழியாக கடந்த 1-ம் தேதி வினாடிக்கு 30 கன அடியாக தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு வந்ததடைந்தது. மறுநாள் காலை வினாடிக்கு 50 கன அடியாக பூண்டி ஏரியை வந்தடைந்தது. தொடர்ந்து கிருஷ்ணா கால்வாயில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 520 கன அடியாக நீர்வரத்து உள்ளது. தற்போது பூண்டி ஏரியில் மொத்த உயரமான 35 அடியில் 28.72 அடி உயரத்துக்கு நீர் மட்டம் உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து லிங்க் கால்வாய் வழியாக வினாடிக்கு 301 கனஅடி தண்ணீரும், மழலைக் கால்வாய் வழியாக வினாடிக்கு 30 கன அடி தண்ணீரும் சென்னை குடிநீருக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 15 February 2010 11:07
 


Page 300 of 390