Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை: திண்டுக்கல் நகராட்சி மக்கள் தவிப்பு : ரூ.100 கோடி காவிரி திட்டம் வீணானது

Print PDF

தினமலர் 15.02.2010

12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை: திண்டுக்கல் நகராட்சி மக்கள் தவிப்பு : ரூ.100 கோடி காவிரி திட்டம் வீணானது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வழங்க மூன்று திட்டங்கள் இருந்தும் 12 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, காமராஜர் காலத்தில் ஆத்தூர் திட்டம் துவக்கப்பட்டது.இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 80 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுக்க முடியும். வழியோர கிராமங்களின் குடிநீர் தேவை போக 50 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் திண்டுக்கல் வருகிறது.

பகிர்மான குழாயில் உள்ள உடைப்பால் இந்த தண்ணீர் வினியோகத்திலும் குளறுபடி நடக்கிறது.ஆத்தூர் திட்டத்திலிருந்து போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறி பேரணை பகுதியில் கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யும் பேரணை திட்டம் 40 லட்ச ரூபாய் செலவில் தீட்டப்பட்டது.இதன் மூலம் திண்டுக்கல் நகருக்கு நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டது.

தண்ணீரே வராத பேரணை பகுதியிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக பொருத்தப்பட்ட மோட் டார்கள் அடிக்கடி பழுதாவதாக கூறி நகராட்சியும் பல லட்சங்களை செலவழித்து வருகிறது. ஆனால்

திண் டுக்கல்லுக்கு இந்த திட்டத்தின் மூலம் மட்டும் தண்ணீர் வந்து சேரவில்லை.காவிரி காலை வாரியது: திண்டுக்கல் நகராட்சிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக 100 கோடி ரூபாய் செலவில் 2001ல் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துவக்கப்பட்டது.இந்த திட்டம் 2003ல் கான்ட்ராக்ட் விடப்பட்டு, 2007ல் செயல்பாட்டிற்கு வந்தது.

இந்த திட்டத்தின் கீழ் கரூர் காவிரி ஆற்றில் ரங்கநாதன் பேட்டை,புதுப்பாளையம் ஆகிய இடங்களில் கிணறுகள் தோண்டப்பட்டு,நாள் ஒன்றுக்கு 195 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.வழியோர கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்தது போக திண்டுக்கல்லுக்கு 80 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது.12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்:திண்டுக்கல் நகராட்சி மக்களுக்கு 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.ஆத்தூர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம்செய்யும் போது கூட 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைத்தது. தற்போது பெரிய திட்டமாகிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் இருந்தும் 12 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் கிடைக்கிறது.துணை முதல்வர் கூறியது என்ன: திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு நடந்த விழாவிற்கு வந்த துணை முதல்வர் ஸ்டாலின், திண்டுக்கல் நகராட்சிநிர்வாகம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என்று அறிவித்தார்.ஆனால் அவர் அறிவித்து சென்று ஓராண்டாகியும் மழை காலத்தில் கூட மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் இல்லை என்பது தான் வருத்தமான விஷயம்.

Last Updated on Monday, 15 February 2010 07:35
 

சீரான நீர் வினியோகம் பேரூராட்சியில் தீர்மானம்

Print PDF

தினமலர் 15.02.2010

சீரான நீர் வினியோகம் பேரூராட்சியில் தீர்மானம்

மஞ்சூர்:கீழ்குந்தா பேரூராட்சி வார்டு பகுதிகளில், நீர் வினியோகத்தை முறைபடுத்த தீர்மானிக்கப்பட்டது.கீழ்குந்தா பேரூராட்சியின் 15 வார்டுகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்களுக்கு, அம்மக்கல், ஊசிமலை, கட்லாடா நீராதாரத்திலிருந்து நீர் வினியோகிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் குழாய்கள் அமைக்கப்பட்டதால், உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகிறது.பிரச்னையை மையப்படுத்தி, 9,10ம் வார்டை சேர்ந்த மட்டக்கண்டி மக்கள், சமீபத்தில், தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த, கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி தலைவர் ஆஷா தலைமையில் அவசர கூட்டம் நடத்தப்பட்டது.செயல் அலுவலர் (பொ) ஜெயராமன், துணைத் தலைவர் பாபு முன்னிலை வகித்தனர். அனைத்து வார்டுகளுக்கும் சீராக நீர் வினியோகிக்க, குறைந்தபட்ச தேவை திட்டத்தின் கீழ், குடிநீர் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Monday, 15 February 2010 07:29
 

ஆறுமுகநேரி பகுதியில் குடிநீர் பிரச்னை :எம்எல்ஏ ஆலோசனை

Print PDF

தினமலர் 15.02.2010

ஆறுமுகநேரி பகுதியில் குடிநீர் பிரச்னை :எம்எல்ஏ ஆலோசனை

திருச்செந்தூர் ஆறுமுகநேரி பகுதி குடிநீர் பிரச்னையைத் தீர்க்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் எம்எல்ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை செய்தார்.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறுமுகநேரி டவுன் பஞ்.,சில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து பொதுமக்களுக்கும், டவுன் பஞ்., மற்றும் நிர்வாகத்திற்கு இடையே பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு அடிப்படை வசதிகளான சாலை, தெருவிளக்கு உள்ளிட்டவைகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை செய்தார். திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து ஆறுமுகநேரி டவுன் பஞ்., நிர்வாக அதிகாரி தாணு மூர்த்தி, பொறியாளர் நக்கீரன், மின் விநியோக பொறியாளர் அப்துல்லா ஆகியோரிடமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தூத்துக்குடி பராமரிப்புக் கோட்டைத்தைச் சேர்ந்த நிர்வாக பொறியாளர் கிருஷ்ணன், உதவி நிர்வாக பொறியாளர் தாணுலிங்கம், உதவிப் பொறியாளர் பாலசுப்பிரமணியம், திருச்செந்தூர் வட்டாட்சியர் இளங்கோ, ஆறுமுகநேரி டவுன் பஞ்., கவுன்சிலர்கள் கல்யாணசுந்தரம், ஜெயராஜ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை குறித்து எம்எல்ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது;

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறுமுகநேரி டவுன் பஞ்.,ல் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த மனுக்கள் சம்பந்தமாக தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினோம். மேலும் தொகுதிக்குட்பட்ட புன்னக்காயல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் குடிநீர் குழாய் உடைப்பிற்கு தீர்வு காண்பதற்காகவும், ஆத்தூர் பகுதி மக்கள் மாதாந்திர மின் கட்டணம் செலுத்த அருகிலுள்ள ஆறுமுகநேரிக்கும் மற்றும் குலசை., பகுதி மக்கள் உடன்குடிக்கும் வரவேண்டியதிருப்பதால் அவர்களின் நலன் கருதி அந்தந்த ஊர்களிலே மின் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். மக்கள் பிரச்னைகளை தீர்க்க, முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் கூறினார். நிகழ்ச்சியின் போது திருச்செந்தூர் விஏஓ., பாலசுப்பிரமணியம், திருச்செந்தூர் திமுக நகர செயலாளர் கோபால், கிருபா, கானம் டவுன் பஞ்., தலைவர் செந்தமிழ் சேகர், காயல்பட்டணம் கவுன்சிலர் சுகு ஆகியோர் உடன் இருந்தனர்.

Last Updated on Monday, 15 February 2010 07:24
 


Page 301 of 390