Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

நாளை சென்னை குடிநீர் வாரிய திறந்தவெளிக் கூட்டம்

Print PDF

தினமணி 12.02.2010

நாளை சென்னை குடிநீர் வாரிய திறந்தவெளிக் கூட்டம்

சென்னை, பிப். 11: குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வடிகால்வாய் தொடர்பான பிரச்னைகளை பொதுமக்கள் நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் சென்னை குடிநீர் வாரியம் திறந்தவெளி கூட்டங்களை சனிக்கிழமை நடத்துகிறது.

தண்டையார்பேட்டை, எம்.சி. சாலை, வியாசர்பாடி, இந்திராநகர், அண்ணாநகர், முகப்பேர், டாக்டர் ரங்கா சாலை, சத்திய மூர்த்தி ரோடு, முத்து கிருஷ்ணன் சாலை உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள சென்னை குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்தவெளிக் கூட்டம் நடைபெறும்.

மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Last Updated on Friday, 12 February 2010 11:27
 

வைகை அணையில் இருந்து திண்டுக்கல்லுக்கு குடிநீர் கொண்டுவர ஆய்வு

Print PDF

தினமணி 12.02.2010

வைகை அணையில் இருந்து திண்டுக்கல்லுக்கு குடிநீர் கொண்டுவர ஆய்வு

திண்டுக்கல்
, பிப்.11: திண்டுக்கல் நகரில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்பட்டு வருகிறது. இது குறித்து திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நகரில் பாதாள சாக்கடைகள் அமைக்கும் பணிகளுக்காக பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் நலன் கருதி சாலைகளை உடனே சீரமைக்கத் திட்டங்களைத் தயாரித்து வருவாய்த் துறை அமைச்சர் இ.பெரியசாமி, துணை முதல்வரை நேரில் சந்தித்து இப்பணிகள் பற்றிய அவசியத்தை வலியுறுத்தினார். துணை முதல்வரும் இப்பணிகளின் அவசியத்தை ஏற்று நகராட்சிகளின் தலைமைப் பொறியாளரை திண்டுக்கல் நகருக்கு அனுப்பி வைத்தார்.

அவரும் பணிகளை ஆய்வு செய்து சென்றுள்ளார். இப்பணிகளுக்காகத் திண்டுக்கல் நகராட்சிக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள அமைச்சர் இ.பெரியசாமி முயற்சியால் திண்டுக்கல் நகராட்சிக்கு அரசு சிறப்பு நிதி அளித்துள்ளது. முக்கிய சாலைகளின் சீரமைப்புப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. பிற சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் நகரில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் வைகை அணையில் இருந்து நேரடியாக 26 கி.மீ. தூரம் தனிக்குழாய்கள் அமைத்து நிலக்கோட்டை அருகே உள்ள பேரணைக்கு வைகை நீரைக் கொண்டு வந்து அங்கிருந்து திண்டுக்கல் நகர், ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய பகுதிகளுக்கு ஒரே சீரான குடிநீர் விநியோகிப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமன்றத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியக் கோரிக்கையில் இத் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத் திட்டம் நிறைவேறும்போது திண்டுக்கல் நகரில் தினந்தோறும் குடிநீர் விநியோகம் ஒரே சீராக அமையும். நிலைமை இவ்வாறு இருக்க இதற்கான போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மறியல்கள் அவசியமற்றது. மேலும் கொசு ஒழிப்புக்காக நகராட்சி சார்பில் வாங்கப்பட்ட நவீன கருவிகள் மூலம் தினந்தோறும் எல்லா பகுதிகளிலும் சுழற்சி முறையில் புகை தெளிக்கப்பட்டு வருகிறது. கம்ப்ரசர் மூலம் மருந்து அடிக்கப்பட்டு வருகிறது என நகர்மன்றத் தலைவர் ஆர். நடராஜன் தெரிவித்துள்ளார்.

Last Updated on Friday, 12 February 2010 11:25
 

திண்டுக்கல் குடிநீர் பிரச்னைக்கு மாற்று ஏற்பாடு

Print PDF

தினமலர் 12.02.2010

திண்டுக்கல் குடிநீர் பிரச்னைக்கு மாற்று ஏற்பாடு

திண்டுக்கல்:""திண்டுக்கல்லில் தினமும் குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்வதற்கு ஆய்வு நடந்து வருவதாக'' நகராட்சி தலைவர் ஆர்.நடராஜன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணிகளுக்காக ரோடுகள் தோண் டப்பட்டு குழாய்கள் பதிக்கப்படுகின்றன.

தோண்டப்பட்ட ரோடுகளை சீரமைப்பு செய்ய அமைச்சர் பெரியசாமி, துணை முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத் தார்.இதனையடுத்து நகராட்சிகளின் தலைமை பொறியாளர் திண்டுக் கல் லிற்கு வந்த ஆய்வு செய்ததின் பேரில் நகராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

சாலை சீரமைப்பு பணிகளுக்காக ஏற்கனவே அரசு ஒதுக்கிய சிறப்பு நிதியை கொண்டு நகரில் பல முக்கிய ரோடுகள் சீரமைக்கப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ளன. திண்டுக்கல்லில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க வைகை அணையில் இருந்து 26 கி.மீ., தூரம் தனி குழாய் அமைத்து பேரணைக்கு நீரை கொண்டு வந்து அங்கிருந்து, திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளுக்கு ஒரே சீராக குடிநீர் வினியோகம் செய்ய சட்டசபையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை நிறைவேற்ற ஆய்வுப்பணி நடந்து வருகிறது.திட்டம் நிறைவேறும் போது திண்டுக்கல்லுக்கு தினமும் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Last Updated on Friday, 12 February 2010 06:54
 


Page 303 of 390