Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஆண்டிபட்டிக்கு கூடுதல் குடிநீர் திட்டம் தேவை: பழைய திட்டங்களால் வீணாகும் குடிநீர்

Print PDF

தினமலர் 08.02.2010

ஆண்டிபட்டிக்கு கூடுதல் குடிநீர் திட்டம் தேவை: பழைய திட்டங்களால் வீணாகும் குடிநீர்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சியின் கூடுதல் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம் கொண்டு வர நடவடிக்கை வேண்டும். ஆண்டிபட்டி பேரூராட்சியில் 30 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பல்வேறு வேலை நிமித்தமாக தினமும் ஆண்டிபட்டி வந்து செல்கின்றனர்.

சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி மற்றும் விரிவாக்க பகுதிகளில் ஏழு குடிநீர் மேல்நிலைத்தொட்டிகள் உள்ளன. 1974 ல் துவக்கப்பட்ட குன்னூர்-அரப்படித்தேவன்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 12 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கூடுதல் குடிநீர் தேவைக்கு சேடபட்டி-ஆண்டிபட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 12 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குன்னூர் ஆற்றில் நீர் வரத்து குறைந்த காலங்களில் கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்து போகும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு போடப் பட்ட குன்னூர்-அரப்படித்தேவன்பட்டி திட்டத்தில் குடிநீர் உறை கிணறு, பைப் லைன்கள் அடிக்கடி சேதம் அடைகிறது. ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதிக்கு வரும் குடிநீர் வழியோர கிராமங்களில் திருடப்படுவதால் முழுமையாக வந்து சேர்வதில்லை. இதனால் கோடையில் கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆற்றில் நீர் வரத்து அதிகம் உள்ள மழை காலங்களில் சுத்திகரிக்கப்படாத குடிநீர் வினியோகத்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

பேரூராட்சி குடிநீர் தேவையின் நிரந்தரமான தீர்வுக்கு வைகை அணை "பிக்கப்' டேமில் இருந்து புதிய திட்டம் துவக்கப்பட வேண்டும் அல்லது ஏற்கனவே உள்ள சேடபட்டி-ஆண்டிபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் கூடுதலாக பம்ப் செய்யப்பட்டு ஆண்டிபட்டி பகுதிக்கு வினியோகிக்க வேண்டும். பேரூராட்சி தலைவர் ராமசாமி, நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் கூறுகையில், "பேரூராட்சி பகுதியின் குடிநீர் தேவைக்கு திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள் ளது. திட்டம் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Last Updated on Monday, 08 February 2010 05:40
 

16 பேரூராட்சிகளுக்கு பில்லூர் குடிநீர் ரூ.81.46 கோடியில் புதிய திட்டம்

Print PDF
தினகரன் 05.02.2010

16 பேரூராட்சிகளுக்கு பில்லூர் குடிநீர் ரூ.81.46 கோடியில் புதிய திட்டம்

கோவை: கோவை மாநகராட்சியை ஒட்டியுள்ள 16 பேரூராட்சிகளுக்கு 81.46 கே £டி ரூபாய் செலவில் புதிய பில்லூர் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

கோவை மாநகராட்சியில் பில்லூர் 2வது குடிநீர் திட்டப்பணி நடக்கிறது. 113.74 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகர் பகுதியில் 6.5 கோடி லிட்டர் குடிநீர் தினமும் கிடைக்கும். புறநகர் பகுதிகளுக்கு, அதாவது கோவை மாநகரை ஒட்டியுள்ள பேரூராட்சிகளுக்கு புதிதாக குடிநீர் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

பில்லூர் 2வது குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது, புறநகருக்கு கூடுதலாக 6.5 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கேற்ப பிரதான குழாய், பகிர்மான குழாய், மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதன் மூலம் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, மக்கள் தொகை, குடிநீர் தேவை அடிப்படையில் 16 பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டது. நெ.4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளையம், துடியலூர், வெள்ளகிணறு, இடிகரை, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, காளப்பட்டி, வெள்ளலூர், மதுக்கரை, எட்டிமடை, இருகூர், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், சூலூர் பகுதிகளுக்கு 81 கோடியே 46 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில் பில்லூர் குடிநீர் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் இந்த பணி நடத்தப்படும். புதிய திட்ட மதிப்பீடுகளுடன் நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (அரசாணை எண்;118) உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேரூராட்சிகள் தங்கள் பங்களிப்பாக 40 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டியிருக்கும். தமிழ்நாடு நகர்ப்புர நிதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திடம் கடன் பெற பேரூராட்சிகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. குடிநீர் திட்டம் நிறைவேறும் போது தனி நபர் குடிநீர் அளவு தினமும் 135 லிட்டர் அளவை எட்டும். அனைத்து பகுதியிலும் தடையின்றி குடிநீர் சப்ளை செய்யப்படும். தற்போதுள்ள மக்கள் தொகை அளவை காட்டிலும் கூடுதலாக 2 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்க முடியும். புதிய திட்டத்தின் மூலம் 10 ஆண்டிற்கு மேலாக குடிநீர் தட்டுபாடு ஏற்படாது. பேரூராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கவேண்டியிருக்கும். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு இருப்பதால் சம்பந்தப்பட்ட பேரூராட்சிகள் தங்களுக்கான தொகை செலுத்தி பணிகளை துவக்க முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Friday, 05 February 2010 11:38
 

கோவில்பட்டி நகராட்சியில் குடிநீர் விநியோகம் குறித்த ஆலோசனைக் கூட்டம்

Print PDF

தினமணி 05.02.2010

கோவில்பட்டி நகராட்சியில் குடிநீர் விநியோகம் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டி, பிப். 4: கோவில்பட்டி நகராட்சியில் குடிநீர் விநியோகம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகர்மன்றத் தலைவி மல்லிகா தலைமையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

ஒவ்வொரு மண்டலத்திற்கும் 2 மணி நேர குடிநீர் விநியோகம் செய்வது என்றும், இத் திட்டம் வேலாயுதபுரம் பகுதி குடிநீர் விநியோகத்திலிருந்து அமல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரத்தில் மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டால், நகராட்சி அதிகாரிகள் மோட்டாரை பறிமுதல் செய்து இணைப்பு துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க நகர்மன்ற உறுப்பினர்கள் தவமணி (திமுக), ஜோதிபாசு (சி.பி.எம்.), தெய்வேந்திரன் (மதிமுக), பேச்சிமுத்து (காங்கிரஸ்), ராமர் (அதிமுக), லட்சுமணன் (தேமுதிக) சரோஜா (சி.பி..) ஆகியோர் கொண்ட குழு அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என நகர்மன்றத் தலைவி மல்லிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


Page 306 of 390