Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஓராண்டில் நிறைவடையும்: அமைச்சர்

Print PDF

தினமணி 23.12.2009

தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஓராண்டில் நிறைவடையும்: அமைச்சர்

விருதுநகர், டிச. 22: விருதுநகர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காணும் விதத்தில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு, கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இம் மாவட்ட மக்களுக்கான குடிநீர்த் திட்டத்தை உரிய முறையில் நிறைவேற்ற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

இங்கு மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகள், 1457 ஊரகக் குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு, செயல்படுத்தவுள்ள கூடடுக் குடிநீர்த் திட்ட விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியது:

குடிநீர்ப் பிரச்னை மிகுந்த மாவட்டம் என்ற குறையைப் போக்கும விதத்தில், செயல்படுத்தவிருக்கும் இத் திட்டம் மிகப் பெரிய காரியமாகும். கிராமஙகளுக்கு குடிநீர் வரவில்லை என்ற குறை இருக்காத விதத்தில், தொழில்நுட்ப பாதிப்புகளைத் தவிர்க்கும் விதத்தில், இத் திட்டம் மூனறு பிரிவாகப் பிரித்து செயல்படுத்துகிறது.

தாமிரபரணி நீராதாரத்திலிருந்து நீரை உறிஞ்சக் கிணறுகளை அமைத்து, தண்ணீர் எடுக்கப்பட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் அமைக்கப்படவுள்ள தரைமட்டத் தொட்டியில் விடப்படும். இப் பணிக்கு குடிநீர் வடிகால் வாரியம் கட்டணம் ஏதும் வசூலிக்காது.

பின்னர் அநதந்த ஊராட்சிகள் திட்டமிட்டு, தொட்டியிலிருந்து குடிநீரை விநியோகிக்க வேண்டும். இத் திட்டச் செயல்பாட்டில் நடைமுறை சிக்கல்களைத் தவிர்ககும் விதத்தில, முன்கூட்டியே விவாதித்து அமல்படுத்தபபடுகிறது.

இத் திட்டம் மூலம் கிராமங்களுக்கு முறையாக குடிநீர் விநியோகித்தால், தற்போது பொறுபபிலுள்ள ஊராட்சித் தலைவர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக அமையும். இதற்கேற்ப அனைத்துத் தரப்பினர் ஒத்துழைப்புடன், ஊராட்சிகளில் திட்டப் பணிகளைச் செய்ய வேண்டும்.

உள்ளூரில் கிடைக்கும் தண்ணீர் குளித்தல் உள்ளிட்ட தேவைகளுக்கும் தாமிரபரணி தண்ணீர் குடிப்பதற்கெனப் பயன்படுத்த வேண்டும். மேலும் பேரூராட்சிப் பகுதிகளில் தினசரி ஒருவருக்கு 40 லிட்டர் குடிநீர், ஊரகக் குடியிருப்புப் பகுதிகளில் 30 லிட்டர் குடிநீர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மொத்த குடிநீர்த் தேவை 50.38 மில்லியன் லிóட்டர். விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்கும் விதத்தில் இத் திட்டம் அமையும் என்றார் அமைச்சர்.

கூட்டத்தில் வருவாய்த் துறை அதிகாரி பா.கணேசன், குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர்கள் தி.சம்பத், ச.முருகேசன், இரா.ஜெயபால் ஆகியோர் திட்டம் குறித்து விளககினர். உதவிப் பொறியாளர் ச.தமிழ்ச்செல்வி நனறி கூறினார்.

 

வரி ஏய்ப்பு: தனியார் மண்டபத்தின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமணி 23.12.2009

வரி ஏய்ப்பு: தனியார் மண்டபத்தின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர், டிச.22: மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை 5 ஆண்டுகளாக செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வந்த தனியார் மண்டபத்தின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை துண்டித்தனர்.

இதேபோல், மாநகராட்சி முழுவதும் தொடர்ந்து வரிசெலுத்தாமல் ஏமாற்றம் செய்துவருவோரின் குடிநீர் இணைப்புகளையும் துண்டிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சியின் 2009-10ம் ஆண்டுக்கான சொத்துவரி ரூ.21.5 கோடி, குடிநீர்க் கட்டணம் ரூ.4 கோடி, தொழில் வரி ரூ.1 கோடி கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதியாண்டு முடிவடைய இன்னும் 3 மாதங்களே உள்ளதால் வரி வசூலிக்கும் பணியை மாநகராட்சி நிóர்வாகம் தீவிரப்படுத்தயுள்ளது. அதன்படி, இதுவரை சொத்து வரி ரூ.7.5 கோடியும், குடிநீர் கட்டணம் ரூ.2 கோடியும், தொழில்வரி ரூ.50 லட்சமும், இதர வரியினங்கள் 70 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலுவையில் உள்ள வரியினங்களை வசூலிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த நிதியாண்டுகளில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களைத் தொடர்ந்து செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருபவர்களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, திருப்பூர் 35வது வார்டுக்கு உட்பட்ட எம்.ஜி.புதூரில் உள்ள ஒரு திருமண மண்டப நிர்வாகத்தினர் கடந்த 5 ஆண்டுகளாக சொத்துவரி, குடிநீர் கட்டணம் என மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சுமார் ரூ.45 ஆயிரம் வரித்தொகையை இதுவரை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி உத்தரவின் பேரில் உதவி செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை அம்மண்டபத்தின் குடிநீர் இணைப்பைத் துண்டித்தனர்.

இதேபோல், மாநகராட்சி முழுவதும் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்துவருவோரின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் விரைவில் அதற்கான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஊராட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை

Print PDF

தினமணி 22.12.2009

தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஊராட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை

விருதுநகர், டிச. 21: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு பேரூராட்சிகள் மற்றும் 1759 ஊரகக் குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்று நீராதாரமாகக் கொண்டு செயல்படுத்தவுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டம் குறித்து அனைத்து ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச. 22) நடைபெறுகிறது. இதற்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

இம் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகள் மற்றும் 1759 ஊரகக் குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கூடல், சீவலப்பேரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திóல வல்லநாடு ஆகிய இடங்களில் நீராதாரம் தேர்வு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முக்கூடல் அருகே உத்தேசிக்கப்பட்டுள்ள நீராதாரத்திலிருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்ராயிருப்பு ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 445 ஊரகக் குடியிருப்புகளுக்கும், 7 பேரூராட்சிகளுóக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும் சீவலப்பேரி அருகே உள்ள நீராதாரத்திலிருந்து விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 804 ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.

வல்லநாடு அருகில் உள்ள நீராதாரத்திலிருந்து அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 510 ஊரக குடியிருப்புகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யபபடும்.

தற்போது அனைத்து ஊராட்சிகளிலும் இக் குடிநீர்த் திட்ட விநியோகத்துக்காக தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து, 450 ஊராட்சிகளில் உள்ள அனைத்துக் குடியிருப்புகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஊராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் தரை மட்ட நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் இடம் முடிவு செய்யப்படும். அதனால் இதன் தலைவர்கள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஆட்சியர் (பொ) கணேசன்.

 


Page 320 of 390