தினமணி 03.12.2009
குடிநீர் குழாய் மாற்றும் பணி
புதுச்சேரி, டிச.2: புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில் குடிநீர் குழாய் மாற்றும் பணி முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரில் நடைபெறுகிறது.
÷இப் பணி ரூ.13.25 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. எம்எல்ஏ டாக்டர் எம்ஏஎஸ் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். கவுன்சிலர் ஏ.ஆர். செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
÷தியாகு முதலியார் நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியிலிருந்து வழங்கப்படும் குடிநீர் விநியோகம் இந்தக் குழாய்களின் மூலம் சுத்தமான முறையிலும் மற்றும் தேவையான அழுத்தத்திலும் தியாகு முதலியார் நகர் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வழங்கப்படும்.