Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் குழாய் மாற்றும் பணி

Print PDF

தினமணி 03.12.2009

குடிநீர் குழாய் மாற்றும் பணி

புதுச்சேரி, டிச.2: புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில் குடிநீர் குழாய் மாற்றும் பணி முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரில் நடைபெறுகிறது.

÷இப் பணி ரூ.13.25 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. எம்எல்ஏ டாக்டர் எம்ஏஎஸ் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். கவுன்சிலர் ஏ.ஆர். செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

÷தியாகு முதலியார் நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியிலிருந்து வழங்கப்படும் குடிநீர் விநியோகம் இந்தக் குழாய்களின் மூலம் சுத்தமான முறையிலும் மற்றும் தேவையான அழுத்தத்திலும் தியாகு முதலியார் நகர் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வழங்கப்படும்.

Last Updated on Thursday, 03 December 2009 07:57
 

கீழ்குந்தா பேரூராட்சியில் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய குழாய்கள்

Print PDF

தினமலர் 02.12.2009

 

செங்கோட்டையில் குடிநீர்த் தொட்டிகள் பயன்பாட்டிற்கு அளிப்பு

Print PDF

தினமணி 2.12.2009

செங்கோட்டையில் குடிநீர்த் தொட்டிகள் பயன்பாட்டிற்கு அளிப்பு

தென்காசி,டிச.1: செங்கோட்டையில் எம்எல்ஏ உள்ளூர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் 10 நீர்óத்தேக்கத் தொட்டிகள் திறப்பு விழா நடைபெற்றது.

செங்கோட்டை 9 வார்டு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டிகள் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நகர்மன்றத் தலைவர் எஸ்.எம்.ரஹீம் குடிநீர்த் தேக்க தொட்டிகளை திறந்துவைத்தார். நகராட்சி ஆணையர் ராமகிருஷ்ணன், நகர்மன்ற துணைத் தலைவர் ஆதிமூலம், நகர்மன்ற உறுப்பினர் முகம்மது முஸ்தபா, காளியம்மாள், ரவீந்திரன், சுமதி, பத்மாவதி,செல்வகுமாரி, ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


Page 325 of 390