தினமணி 24.11.2009
நாளை காவிரி கூட்டு குடிநீர் நிறுத்தம்
சிவகங்கை, நவ.23: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பகுதிகளுக்கு புதன்கிழமை (நவம்பர் 25) குடிநீர் வழங்குவது நிறுத்தி வைக்கப்படுகிறது என ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட நிர்வாகப் பொறியாளர் பி.எஸ்.ராம்பாபு தெரிவித்துள்ளார்.
மேலும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையம் அமைந்திருக்கும் திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூரில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் புதன்கிழமை மட்டும் குடிநீர் நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.