தினத்தந்தி 17.07.2013
உசிலம்பட்டி நகராட்சியில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம்
இந்த நிலையில் 24 வார்டுகளிலும் டிராக்டர் மூலம் குடிநீர் வழங்க நகராட்சியில் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து 24 வார்டுகளுக்கும் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவித்து டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதனை நகராட்சி தலைவர் பஞ்சம்மாள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைவருக்கும் ஒரே அளவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.