தினமணி 28.05.2010
விழுப்புரத்தில் குடிநீர் தொட்டிகள் சுத்திகரிப்பு
விழுப்புரம், மே 27: விழுப்புரம் நகரில் உள்ள இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை சுத்திகரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நகராட்சிகளின் இயக்குநர் அண்மையில் உத்தரவிட்டார்.
இதையொட்டி விழுப்புரம் நகரில் உள்ள குடிநீர் குழாய்களில் உள்ள நீரை உறிஞ்சி, குளோரின் மாத்திரைகள் செலுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள 9 லட்சம் மற்றும் 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை ஓவர்சீயர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து, குளோரின் கலக்கினர்.