Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

50,000 பேர் தண்ணீர் குடிக்க வசதியாக கடற்கரையில் குடிநீர் தொட்டி திறப்பு

Print PDF

தினகரன் 16.06.2010

50,000 பேர் தண்ணீர் குடிக்க வசதியாக கடற்கரையில் குடிநீர் தொட்டி திறப்பு

அரிமா சங்கம் சார்பில் மெரினா கடற்கரையில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்து சுத்திகரிக்கப்பட்ட நீரை அருந்துகிறார் மேயர் மா.சுப்பிரமணியன்.

அரிமா சங்கம் சார்பில் மெரினா கடற்கரையில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்து சுத்திகரிக்கப்பட்ட நீரை அருந்துகிறார் மேயர் மா.சுப்பிரமணியன்

 

சென்னை, ஜூன் 16: மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பின்புறம் அரிமா சங்கம் சார்பில், ரூ.9 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்து பேசியதாவது:

மெரினா கடற்கரை உலகிலேயே 2வது நீளமான கடற்கரையாக உள்ளது. இதுமட்டும் போதாது, ‘உலகிலேயே அழகான கடற்கரையாக மெரினாவை மாற்ற வேண்டும் என்று விரும்பிய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு..ஸ்டாலின் முயற்சியில் ரூ.21 கோடியில் மெரினா கடற்கரை அழகுபடுத்தப்பட்டுள்ளது. இதன்பிறகு மெரினா கடற்கரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடற்கரைக்கு வருபவர்கள் பாக்கெட் குடிநீரை குடித்து வந்தனர். அதனால், மெரினாவில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க அரிமா சங்கம் மூலம் 2 இடங்களில் குடிநீர் தொட்டி திறக்கப்பட்டுள்ளது. புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் 9,000 லிட்டர் தண்ணீர் நிரப்பி, நவீன இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் தினசரி 50 ஆயிரம் பேர் தண்ணீர் குடிக்க முடியும்.

எவ்வளவுதான் கடற்கரையை அழகுபடுத்தினாலும் சிறுகடைகளின் ஆக்கிரமிப்பால் கடற்கரை மணல்பரப்பு கூட தெரியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை முதல்வரும் விரும்பவில்லை. உலகின் அழகான கடற்கரையாக மெரினா கடற்கரையை மாற்ற அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். நேப்பியர் பாலத்தில் ரூ.1 கோடியே 60 லட்சத்தில் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஒரு மாதத்தில் இந்த பணி முடியும். அதன்பிறகு பாலத்தின் மின் அலங்காரத்தை பார்ப்பதற்காகவே மக்கள் வருவார்கள்.

எவ்வளவுதான் கடற்கரையை அழகுபடுத்தினாலும் சிறுகடைகளின் ஆக்கிரமிப்பால் கடற்கரை மணல்பரப்பு கூட தெரியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை முதல்வரும் விரும்பவில்லை. உலகின் அழகான கடற்கரையாக மெரினா கடற்கரையை மாற்ற அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். நேப்பியர் பாலத்தில் ரூ.1 கோடியே 60 லட்சத்தில் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஒரு மாதத்தில் இந்த பணி முடியும். அதன்பிறகு பாலத்தின் மின் அலங்காரத்தை பார்ப்பதற்காகவே மக்கள் வருவார்கள்.