Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: குறித்த காலத்துக்குள் முடிக்க அறிவுரை

Print PDF

தினமணி 26.07.2010

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: குறித்த காலத்துக்குள் முடிக்க அறிவுரை

சென்னை, ஜூலை 25: சென்னை அடுத்த நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை குறித்த காலத்துக்குள் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் அஷோக் வர்தன் ஷெட்டி அறிவுரை கூறினார்.

சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் கிண்டி திரு.வி.. தொழிற்பேட்டையில் ரூ. 4.5 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் அகற்று நிலையத்தையும், ஈக்காட்டுதாங்களில் அமைந்துள்ள குடிநீர் பகிர்மான நிலையம் மற்றும் நீர் உந்தும் நிலையம் ஆகியவற்றை முதன்மை செயலர் அஷோக் வர்தன் ஷெட்டி சனிக்கிழமை ஆய்வு செய்தார். மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் அமைக்கப்பட்டுவரும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தையும் அவர் ஆய்வு செய்தார்.