Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒசூர் புதிய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்கள் திறப்பு

Print PDF

தினமணி 26.07.2010

ஒசூர் புதிய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்கள் திறப்பு

ஒசூர்,​​ ஜூலை 25:​ ஒசூர் புதிய பஸ் நிலையத்தில்,​​ இரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ​ இயந்திரங்களை நகர்மன்றத் தலைவர் எஸ்..சத்யா திறந்துவைத்தார்.

​ பயணிகளின் குடிநீர் தேவைக்காக ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட இவ்விரு இயந்திரங்களையும் வணிகர் சங்கம் அமைத்துள்ளது.​ பஸ் நிலையம் நுழையும் இடத்தில் ஒரு இயந்திரமும்,​​ பஸ்கள் வெளியில் செல்லும் இடத்தில் மற்றொரு இயந்திரமும் உள்ளன.​ இவற்றின் பராமரிப்பை ஒசூர் வணிகர் சங்கமே மேற்கொள்கிறது.

​ பஸ் நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவுக்கு,​​ கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் அந்தோனிசாமி தலைமை வகித்தார்.

​ ஒசூர் வணிகர் சங்கத் தலைவர் தாமஸ்ஜான்,​​ செயலர் பாஸ்கர்,​​ நகர்மன்றத் துணைத் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன்,​​ நகர்மன்ற உறுப்பினர்கள் வீ.விஜயகுமார்,​​ அ.யுவராஜ்,​​ ரமேஷ்பாபுஎல்லோரா மணி,​​ இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.