தினமணி 15.06.2010
கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவிகம்பம்
, ஜூன் 14: தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவுத் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிகளுக்கு தலா ரூ. 6 ஆயிரம் வீதம் ரூ. 50 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. கம்பம் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சித் தலைவர் அம்பிகாபாண்டியன் தலைமை வகித்தார்.துணைத் தலைவர் செந்தில்குமார்
, சுகாதார அலுவலர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ரூ. 50 லட்சம் காசோலைகள் வழங்கப்பட்டதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.