Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி

Print PDF

தினமணி 15.06.2010

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி

கம்பம், ஜூன் 14: தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவுத் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிகளுக்கு தலா ரூ. 6 ஆயிரம் வீதம் ரூ. 50 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. கம்பம் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சித் தலைவர் அம்பிகாபாண்டியன் தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ரூ. 50 லட்சம் காசோலைகள் வழங்கப்பட்டதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.