தினமணி 18.06.2010
சுயஉதவிக் குழுவினருக்கு தொழிற்திறன் பயிற்சி
பெரியகுளம், ஜூன் 17: பெரியகுளம் நகராட்சி மற்றும் நேசம் தொண்டு நிறுவனம் இணைந்து நகராட்சி பகுதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுயஉதவிக் குழுவினர் மற்றும் பெண்களுக்கு சொர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் தொழிற்திறன் பயிற்சி முகாமை நகராட்சி வணிக வளாகக் கட்டடத்தில் 3 நாள்கள் நடத்தின.
முகாமிற்கு ஆணையர் (பொறுப்பு) என்.மோனி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் எஸ்.அகமது கபீர், சமுதாய அமைப்பாளர் வீரம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காளான் வளர்ப்பு, பேப்ரிக் பெயிண்டிங் உள்பட பல்வேறு வகையான பயிற்சிகளைநேசம் தொண்டு நிறுவன இயக்குநர் பி.முருகன் அளித்தார். இதில் 80 பேர் பயிற்சி பெற்றனர்.