தினமலர் 23.07.2010
சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி
திருப்பூர் : மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில், 25 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2.5 லட்சம் ரூபாய் சுழல் நிதி நேற்று வழங்கப்பட்டது. பத்மாவதிபுரம், செல்வராஜ் நகர், கோல்டன் நகர், கே.வி.ஆர்., நகர், ஸ்ரீவித்யா நகர், எம்.ஜி.ஆர்., நகர், அரண்மனைப்புதூர், பெத்திசெட்டிபுரம், மணியகாரம்பாளையம், கோம்பை தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிர் குழு பிரதிநிதிகளிடம், இந்நிதியை மேயர் செல்வராஜ் வழங்கினார்.கமிஷனர் ஜெயலட்சுமி, சமுதாய அமைப்பாளர்கள் மங்கையர்கரசி, செல்வி, தமிழரசி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.