Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மகப்பேறு நிதி வழங்கும் விழா

Print PDF

தினகரன் 26.07.2010

மகப்பேறு நிதி வழங்கும் விழா

நெல்லிக்குப்பம், ஜூலை 26: நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் நெல்லிக்குப்பம் பகுதியில் 90 கர்ப்பிணி பெண்களுக்கு 5 லட்சம் மதிப்பிலான காசோலையை நகர்மன்ற தலைவர் கெய்க்வாட்பாபு வழங்கினார்.

ஆணையர் (பொறுப்பு) புவனேஸ்வரி, மேலாளர் சிவசங்கரன், பொது பணி மேற்பார்வையாளர் வாசு, துப்புரவு அலுவலர் கிருஷ்ணகுமார், எழுத்தர் பாபு, செல்வம், முன்னாள் கவுன்சிலர் சண்முகம், செந்தாமரை கண்ணன், கபிலன், புருஷோத்தமன், மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நகர்மன்ற தலைவர் பேசுகையில், ‘கடந்த 4 ஆண் டுகளில் நெல்லிக்குப்பம் நகரப் பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு உதவி தொகை யாக ரூ.56 லட்சம் இது வரை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 800க்கும் மேற் பட்ட கர்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளனர்என்றார்.