தினமணி 06.08.2010
சுரண்டையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி
சுரண்டை, ஆக. 5: சுரண்டையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி மூலம் கடனுதவியும், பேரூராட்சி மூலம் சுழல்நிதியும் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. சுரண்டை பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர்ப
. கோமதிபழனி தலைமை வகித்தார். பேரூராட்சி நிர்வாக அதிகாரி ம. சாமுவேல் துரைராஜ், சுரண்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலர் சாமுவேல் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில்
, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் எஸ். பழனி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கடனுதவியும், ரூ.25 ஆயிரம் சுழல்நிதியையும் வழங்கினார்.நிகழ்ச்சியில்
, பேரூராட்சி துணைத் தலைவர் ப. ராமர், பேரூராட்சி உறுப்பினர்கள் எஸ்.கே.டி. ஜெயபால், அ. சீனிவாசன், அருணாசலக்கனி, ராஜேந்திரன், கல்பனா அன்னப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.