Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தி.மலை நகராட்சி சார்பில் மகளிர் குழுவினர் சுற்றுலா

Print PDF

தினகரன் 09.08.2010

தி.மலை நகராட்சி சார்பில் மகளிர் குழுவினர் சுற்றுலா

திருவண்ணாமலை, ஆக.9: திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் 200 பேர் தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றனர்.

திருவண்ணாமலை நகராட்சியில் 169 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. இக்குழுக்களின் தலைவிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய 200 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சுவர்ண ஜெயந்தி திட்ட மேம்பாட்டு சுற்றுலாவுக்காக தருமபுரி மாவட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட சுற்றுலா வாகனத்தை நகராட்சித் தலைவர் இரா.திருமகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், துணைத் தலைவர் ஆர்.செல்வம், ஆணையாளர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், சுற்றுலா குழுவினருடன் நகராட்சித் தலைவர் இரா.திருமகன், பொறியாளர் சந்திரன், அலுவலக மேலாளர் கணேசன், கவுன்சிலர் குட்டி புகழேந்தி, முன்னாள் கவுன்சிலர் சேட்டு முருகேசன் ஆகியோரும் சென்றனர்.

தருமபுரி நகராட்சியில் நடைபெறும் மகளிர் குழுவினருக்கான நெசவு பயிற்சியை குழுவினர் பார்வையிட்டனர். பின்னர், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.