Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாணவியருக்கு ரத்தசோகை கண்டறியும் முகாம்

Print PDF

தினமணி 30.08.2010

மாணவியருக்கு ரத்தசோகை கண்டறியும் முகாம்

வந்தவாசி, ஆக. 28: வந்தவாசி நகராட்சி சார்பில் ரத்தசோகை கண்டறிதல் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாணவியர் 250 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வந்தவாசி நகர்மன்றத் தலைவர் க.சீனுவாசன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் உசேன் பாரூக் மன்னர் முகாமை தொடங்கி வைத்தார். வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெ.வெங்கடேசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்த பரிசோதனை, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.

நகராட்சி பொறியாளர் மகாதேவன், பள்ளித் தலைமை ஆசிரியர் பால சரவணன், சமுதாய அமைப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.