தினமலர் 19.10.2010
வீரப்பன்சத்திரம் நகராட்சியில் உதவித்தொகை வழங்கல்
ஈரோடு: வீரப்பன்சத்திரம் நகராட்சியில் மகப்பேறு உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் மங்கையர்க்கரசி வரவேற்றார். நகராட்சி தலைவர் மல்லிகா நடராஜன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ராஜா மகப்பேறு உதவித்தொகை வழங்கினார். துணைத் தலைவர் செல்வராஜ், கவுன்சிலர்கள் ரவி, ராதாருக்குமணி, மகேந்திரன், தி.மு.க., பிரமுகர்கள் நடராஜன், வக்கீல் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் சவுந்தரராஜன் நன்றி கூறினார். விழாவில் 29 பேருக்கு தலா 6,000 ரூபாய் மகப்பேறு உதவித்தொகை, மூன்று பேருக்கு தலா 400 ரூபாய் முதியோர் உதவித்தொகை, இரண்டு பேருக்கு தலா 400 ரூபாய் ஊனமுற்றோர் உதவித்தொகை வழங்கப்பட்டது.