Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலம்பாளையம் நகராட்சியில் மகளிர் குழுக்களுக்கு மானியத்துடன் சுழல்நிதி

Print PDF

தினமணி 19.09.2009

வேலம்பாளையம் நகராட்சியில் மகளிர் குழுக்களுக்கு மானியத்துடன் சுழல்நிதி

திருப்பூர், செப்.18: 15வேலம்பாளையம் நகராட்சி பகுதியில் சிறப்பாக பணியாற்றிய மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய சுழல்நிதி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடந்தது.

இதில் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகா மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.52,500 சுழல்நிதியாக வழங்கப் பட்டது.

இதுதவிர கண்ணகி மற்றும் சிவசக்தி மகளிர் குழுக்களுக்கு தலா ரூ.13 ஆயிரமும், பாட்டையப்பன் மகளிர் குழுவுக்கு ரூ.11 ஆயிரமும், கலைமகள், ஸ்ரீகஸ்தூரி, பண்ணாரியம்மன், அபிராமி, அன்னைசத்யா ஆகிய மகளிர் குழுக்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் சுழல் நிதி வழங்கப்பட்டது.

மானியத்துடன் கூடிய சுழல்நிதிகளை நகராட்சித் தலைவர் எஸ்.பி.மணி வழங்கினார்.

செயல்அலுவலர் சண்முகம், நகர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Saturday, 19 September 2009 08:54