தினமணி 2.11.2009
338 கர்ப்பிணிகளுக்கு உதவித் தொகை
ஆம்பூர், நவ.1: ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த உள்ளாட்சி தின விழாவில் 338 கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு உதவித் தொகையாக ரூ.10.14 லட்சம் வழங்கப்பட்டது.
ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் வாவூர் நஜீர் அஹமத் தலைமை வகித்து கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி, பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நகராட்சி ஆணையர் தா. உதயராணி, நகர்மன்ற துணைத் தலைவர் தமிழரசி, நகராட்சிப் பொறியாளர் இளங்குமரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் 3 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் குறித்த தகவல் பலகை திறந்து வைக்கப்பட்டது. கையேடு வெளியிடப்பட்டது.
முன்னதாக மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்ற உள்ளாட்சி தின விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.