தினமணி 23.12.2009.
பரமக்குடியில் ரூ.2.59 லட்சம் மகப்பேறு நிதி வழங்கல்
பரமக்குடி,டிச. 22: பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில், கருவுற்ற பெண்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகா முனியசாமி தலைமை வகித்து கருவுற்ற தாய்மார்களுக்கு மகப்பேறு நிதி உதவித் தொகையை வழங்கினார்.
நகர்மன்ற உறுப்பினர்கள் கே.நகேந்திரன், எம்.எஸ்.திலகர், சுப்பையா, ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவகிட்டு வரவேற்றார்.
இதில் நகரின் 36 வார்டுகளைச் சேர்ந்த 42 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா ரூ.6 ஆயி ரம் வீதம் மொத்தம் ரூ.2.59 லட்சம் மகப்பேறு நிதி உதவித் தொகை வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாட்டுகளை சுகாதாரத் துறை அலுவலர்கள் செய்திருந்தனர். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மோகன் நன்றி கூறினார்.