Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லையில் 194 பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவி வழங்கல்

Print PDF

தினமலர் 26.12.2009

நெல்லையில் 194 பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவி வழங்கல்

திருநெல்வேலி:தச்சநல்லூர் மண்டலத்தில் 194 பெண்களுக்கு மகப்பேறு உதவித்தொகை 5.40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 194 பெண்களுக்கு 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மகப்பேறு உதவித்தொகை வழங்கப்பட்டது.மண்டல சேர்மன் சுப்பிரமணியன் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கினார். கவுன்சிலர்கள் பொன். தங்கராஜ், கந்தன், டாக்டர் பிர்தவுசி, மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Last Updated on Saturday, 26 December 2009 11:00