தினமலர் 07.01.2010
பெண்களுக்கு மகப்பேறு நிதி வழங்கல்
குடியாத்தம்:குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் 85 பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவியாக 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, குடியாத்தம் நகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பொறியாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.
மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 85 பெண்களுக்கு மொத்தம் 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை நகர்மன்ற தலைவர் (பொறுப்பு) சவுந்தர்ராஜன் வழங்கினார். இதில், அரசு போக்குவரத்து கழக ஆலோசனைக்குழு உறுப்பினர் குமரன், கவுன்சிலர்கள் மோகன், யுவராஜ், சரவணன், கிருபானந்தம், சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், ஒப்பந்ததாரர் அரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.