தினமணி 12.01.2010
கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி
தேவகோட்டை, ஜன. 11: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சியில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின்கீழ் 98 கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணையாக ரூ.2.84 லட்சத்துக்கான காசோலையை நகர்மன்றத் தலைவர் வேலுச்சாமி வழங்கினார்.
நகராட்சியில் ஜனவரி 10-ம் தேதி 11 மையங்களில் 4,301 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
முன்னதாக, நகராட்சி அலுவலகத்தில் இதை நகர்மன்றத் தலைவர் வேலுச்சாமி துவக்கி வைத்தார்.
இதில் ஆணையர் செழியன், நகர்நல அலுவலர் மருத்துவர் செந்தில்ராஜ், ரோட்டரி சங்கத் தலைவர் அன்பரசு.நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் தங்கையா,முகம்மது அயூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.