Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறந்த மகளிர் சுய உதவி குழுவுக்கு பரிசு

Print PDF

தினமணி 25.02.2010

சிறந்த மகளிர் சுய உதவி குழுவுக்கு பரிசு

சென்னை, பிப். 24: சென்னை மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாநகராட்சி சார்பில் புதன்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

சென்னை மாவட்ட அளவில் 2008}2009}ம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களாக மண்டலம் 9}ல் உள்ள யமுனை, சிந்து பாரதி ஆகிய குழுக்களும், மண்டலம் 5}ல் உள்ள சரோஜினி குழுவும் தேர்வு செய்யப்பட்டன.

சென்னை மாநகராட்சி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் இந்தக் குழுக்களுக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதம் பரிசு காசோலையை மேயர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

இதுபோல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2008}2009}ம் ஆண்டில் அதிக அளவில் கடனுதவி அளித்த ரெப்கோ வங்கிக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரமும், இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ. 10 ஆயிரமும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

சிறந்த வங்கி கிளைக்கான முதல் பரிசுத் தொகை ரூ. 15 ஆயிரம் தண்டையார்பேட்டை ரெப்கோ வங்கி கிளைக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு ரூ. 10 ஆயிரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அசோக்நகர் கிளைக்கும், மூன்றாம் பரிசு ரூ. 5 ஆயிரம் ரெப்கோ வங்கி வியாசர்பாடி கிளைக்கும் வழங்கப்பட்டது.

Last Updated on Thursday, 25 February 2010 10:50