Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொள்ளாச்சியில் 218 மகளிர் குழு சுழல்நிதிக்கு தேர்வு

Print PDF

தினமலர் 15.03.2010

பொள்ளாச்சியில் 218 மகளிர் குழு சுழல்நிதிக்கு தேர்வு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில் 218 மகளிர் சுயஉதவி குழுக்கள் சுழல்நிதி பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இங்கு, 300 குழுக்கள் தரம் பிரிக்கப்பட்டதில், 218 குழுக்கள் மானியத்தில் கடன் பெற தேர்வு செய்யப் பட்டுள்ளன. 200 குழுக்கள் சுழல்நிதி பெறவும், 18 குழுக்கள் பொருளாதார கடன் பெறவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, பொள்ளாச்சி நகராட்சியும், வடக்கு, தெற்கு ஒன்றியங்கள், ஆனைமலை, வேட்டைக் காரன்புதூர், ஒடையகுளம், ஜமீன்ஊத்துக்குளி, சமத்தூர், சூளேஸ்வரன்பட்டி, நெகமம் ஆகிய 8 பேரூராட்சிகளை சேர்ந்த குழுக்களும் சுழல் நிதி பெற தேர்வாகியுள்ளன.ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: தரம் பிரித்து கடன் பெற தேர்வு செய்யப்பட்டுள்ள குழுக்களுக்கு, மார்ச் 16ம் தேதி துணை முதல்வர் தலைமையில் நடக்கும் விழாவில் கடன் வழங்கப் படும். கடன் பெறும் குழுக் கள் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளில் மட்டு மே கடன் பெற வேண்டும்.

குழு மேம்பாட்டிற்குதான், கடன் தொகையை பயன்படுத்த வேண்டும். மேலும், கடனை உரிய காலத்திற்குள் வங்கிகளில் திருப்பி செலுத்த வேண் டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. தேர்வான குழுக்கள் குறித்த முதல் கட்ட பட்டியல், மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இன்னும் இரு தினங்களில், மீதமுள்ள குழுக்களும் தரம் பிரிக்கப்படும். இவ்வாறு, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Monday, 15 March 2010 06:26