தினமணி 17.03.2010
மகப்பேறு திட்டத்தின்கீழ் நிதி உதவி
சங்கரன்கோவில், மார்ச் 16: சங்கரன்கோவில் நகராட்சியில் மகப்பேறு திட்டத்தின் கீழ் தலா ரூ.3000 வீதம் 700 பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான காசோலைகளை நகராட்சித் தலைவர் பார்வதிசங்கர் திங்கள்கிழமை வழங்கினார்.
டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு உதவித் தொகை ரூ.3000, முதல் தவணையாக 400 பேருக்கும், 2-வது தவணையாக 300 பேருக்கும் வழங்கப்பட்டது.
சுகாதார அலுவலர் குருசாமி, நகர சுகாதார செவிலியர் இந்திராகாந்தி, சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த சுப்பிரமணியன், முருகன், கே.எஸ்.கே. சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.