தினமணி 05.05.2010
பெண்களுக்கு மகப்பேறு நிதி
அருப்புக்கோட்டை, ஏப். 4: அருப்புக்கோட்டையில் தமிழக அரசின் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் வழங்கும் விழா, அருப்புக்கோட்டை நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ் முன்னிலை வகித்தார். நகராட்சி கமிஷனர் ரேவகி வரவேற்றார்.
பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், 283 கர்ப்பிணி பெண்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் உதவி பணத்தை வழங்கினார்.
அருப்புக்கோட்டை நகர்மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, கவுன்சிலர்கள் மணி, ரவிக்குமார், துரை மதிவாணன், சிக்கந்தர், ஆறுமுகம் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொறியாளர் கருணாகரன் நன்றி கூறினார்.