தினமணி 06.04.2010
கர்ப்பிணிகளுக்கு நிதி
பழனி, ஏப். 5: பழனி நகராட்சி அலுவலகத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் நிதி உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆணையர் (பொறுப்பு) முத்து தலைமை வகித்த்தார். நகர்மன்ற துணைத் தலைவர் ஹக்கீம், பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார். மொத்தம் 49 பேருக்கு தலா ரூ.6 ஆயிரத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.