தினமலர் 26.04.2010
கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கல்
விழுப்புரம் : விழுப்புரத்தில் 930 கர்ப்பிணிகளுக்கு 30 லட் சம் ரூபாய் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.விழுப்புரம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கான அரசு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி சமுதாயக் கூடத்தில் நேற்று நடந்தது. சேர்மன் ஜனகராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஊழியர் அண்ணாதுரை வரவேற்றார். கமிஷனர் சிவக் குமார், பொறியாளர் பார்த் திபன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பொன்முடியின் துணைவியார் விசாலாட்சி பங்கேற்று 930 கர்ப்பிணிகளுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு நிதியுதவி வழங்கினார். நகராட்சி ஆய்வாளர்கள் பாபு, முருகேசன், நகரமைப்பு ஆய்வாளர் கோகுல், முருகன், சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.