தினமலர் 29.04.2010
கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு சேர்மன் கெய்க்வாட்பாபு நிதியுதவி வழங்கினார்.நெல்லிக்குப்பம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடந்தது. 35 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிதியை சேர்மன் கெய்க்வாட்பாபு வழங்கினார். இன்ஜினியர் புவனேஸ்வரி, மேற்பார் வையாளர் வாசு, மேலாளர் சிவசங்கரன், எழுத்தர் பாபு, கணக்கர் முருகையன் உட்பட பலர் பங்கேற்றனர்.