தினமலர் 30.04.2010
நிதி உதவி வழங்கும் விழா
துறையூர் : துறையூர் நகராட்சி கூட்டமன்றக் கட்டடத்தில், 50 கர்ப்பிணி தாய்மார்களுக்கு முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கும் விழா நடந்தது. நகராட்சி தலைவர் பூபதி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மகாராஜன், ஆணையர் (பொ) பொறியாளர் ரவிச்சந்திரன், துப்புரவு அலுவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உள்ளூர் திட்டக்குழு உறுப்பினர் குணசீலன் தலா ரூ.6 ஆயிரம் வீதம் 50 கர்ப்பிணிகளுக்கு ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். விழாவில் கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர