Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி

Print PDF

தினமணி 15.06.2010

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி

கம்பம், ஜூன் 14: தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவுத் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிகளுக்கு தலா ரூ. 6 ஆயிரம் வீதம் ரூ. 50 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. கம்பம் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சித் தலைவர் அம்பிகாபாண்டியன் தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ரூ. 50 லட்சம் காசோலைகள் வழங்கப்பட்டதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

 

ஆலந்தூர் பகுதியில் 430 பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி

Print PDF

தினகரன் 31.05.2010

ஆலந்தூர் பகுதியில் 430 பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி

ஆலந்தூர், மே 31: ஆலந்தூர் நகராட்சிப் பகுதியை சேர்ந்த 430 பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி வழங்கும் விழா, ஆலந்தூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

ஆலந்தூர் நகராட்சி தலைவர் ஆ.துரைவேலு தலைமை வகித்தார். ஆணையர் என்.மனோகரன், துணை தலைவர் என்.சந்திரன், என்ஜினியர் மகேசன் முன்னிலை வகித்தனர். நகராட்சி சுகாதார அலுவலர் பழனிச்சாமி வரவேற்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், 430 பெண்களுக்கு தலா ரூ.6ஆயிரம் வீதம் ரூ.13 லட்சத்து 80ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

குழந்தை பெற்றபின் வழங்கக் கூடிய "ஜனனி சுரட்ஷா யோஜனா" திட்டத்தின் கீழ் 200 பெண்களுக்கு தலா ரூ.6000 வீதம் ரூ.1லட்சத்து 20 ஆயிரத்துக்கான காசோலைகளையும் அவர் வழங்கினார்.

கவுன்சிலர்கள் ஜெயகுமார், சிவபாஸ்கர், இரா.பாஸ்கர், சச்சீஸ்வரி, திமுக நகர செயலாளர் பி.குணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி      26.05.2010

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

மதுரை, மே 25: டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை கர்ப்பிணிப் பெண்கள் பயன்பெற நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு ரூ.12 கோடியே 65 லட்சத்து 43 ஆயிரம் ஒதுக்கியுள்ளதாக ஆட்சியர் சி.காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு காலத்துக்கு முன்னர் 3 மாதங்களுக்கு ரூ.3,000-ம், பேறுகாலத்துக்குப் பின் 3 மாதங்களுக்கு ரூ.3,000-ம் ஆக மொத்தம் ரூ.6,000 வழங்கப்படுகிறது. பிரசவ காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் மதுரை மாநகர மக்கள் பயன்பெற ரூ.4 கோடியே 53 லட்சத்து 87 ஆயிரமும், புறநகர் மக்கள் பயன்பெற ரூ.8 கோடியே 8 லட்சத்துக்கு 56 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி மாநகராட்சி நகர் நல அலுவலர் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர்களிடம் நேரிலோ அல்லது அலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம். அதன் விவரம் வருமாறு:

கள்ளந்திரி-98942 52178, சமயநல்லூர்-99444 38078, அலங்காநல்லூர்-99658 78582, கச்சக்கட்டி-97919 60917, டி.கல்லுப்பட்டி-98654 30733, கள்ளிக்குடி-94439 51740, செக்கானூரணி-94426 33166, திருப்பரங்குன்றம்-99944 06840, கருங்காலக்குடி-93452 07554, வெள்ளலூர்-94420 63430, தொட்டப்பநாயக்கனூர்-94436 74835, செல்லம்பட்டி-94435 67787, எழுமலை-97909 73133, மதுரை மாநகராட்சி அலுவலர்-94437 39501.

ஏழை கர்ப்பிணிப் பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிதியுதவி பெற்று பிரசவ காலத்தில் உடல் நலம் பேணுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 


Page 21 of 41