Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

வேலூர் மாவட்டத்தில் 5ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு ரூ.113 கோடி சுழல்நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன்       25.05.2010

வேலூர் மாவட்டத்தில் 5ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு ரூ.113 கோடி சுழல்நிதி ஒதுக்கீடு

வேலூர், மே 25:  வேலூர் மாவட்ட மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதி, நேரடி கடன் வழங்க ரூ.113 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மகளிர் திட்ட அலுவலர் பிச்சைக்கண்ணு கூறினார்.

இதுகுறித்து தினகரன் நிருபரிடம் அவர் கூறியதாவது:

மகளிர் மேம்பாட்டு திட்டம் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பல்வேறு திறன் வளர்த்தல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் தற்போது 4 ஆயிரத்து 955 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன.

இந்த குழுக்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும், புதிய மகளிர் குழுக்களை உருவாக்கவும், பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்புகள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள இந்த கூட்டமைப்புகளில் 65 கூட்டமைப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. 180 கூட்டமைப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. தற்போதுள்ள 4 ஆயிரத்து 955 மகளிர் குழுக்களில் 4 ஆயிரத்து 350 குழுக்களுக்கு சுழல்நிதியாகவும், 605 குழுக்களுக்கு நேரடி கடனாகவும் வழங்க ரூ.113 கோடி வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நடப்பாண்டு வேலூர் மாவட்டத்தில் நகரப்பகுதிகளில் 700 மகளிர் சுயஉதவிக்குழுக்களும், கிராமப்புறங்களில் ஆயிரத்து 550 மகளிர் சுயஉதவிக்குழுக்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 250 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட உள்ளன.

மகளிர் குழுக்களை ஒருங்கிணைந்து செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ள கூட்டமைப்புகளுக்கு மகளிர் மேம்பாட்டு திட்டம் மூலம் வணிக நிர்வாகம், கணக்குகளை கையாளுதல் என்று ஆளுமை சார்ந்த ஒன்பது வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது உதவி திட்ட அலுவலர் ரமேஷ்பாபு உடன் இருந்தார்.

 

கடையநல்லூரில் விழா 1300 பேருக்கு மகப்பேறு திட்ட நிதியுதவி வழங்கும் விழா

Print PDF

தினகரன்     21.05.2010

கடையநல்லூரில் விழா 1300 பேருக்கு மகப்பேறு திட்ட நிதியுதவி வழங்கும் விழா

கடையநல்லு£ர், மே 21: கடையநல்லு£ர் நகராட்சியில் டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங் கும் விழா நடந்தது. நகராட்சி தலைவர் இப்ராகிம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் காளிராஜ் முன்னிலை வகித்தார். டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு கால திட்டத்தின் கீழ் 1306 பெண்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ பேசியதாவது:

கடையநல்லு£ர் நகராட்சி பகுதியில் இத்திட்டத்தின் கீழ் ஆயிரத்து 700 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில் தற்போது சுமார் ஆயிரத்து 300 பேருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 400 பேருக்கு அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பணம் வழங்கப்படும். கடையநல்லு£ர் பகுதியில் இஸ்லாமிய மாணவர்களுக்கென தனியாக ஒரு விடுதி அமைக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அதை பரிசீலனை செய்வதாக முதல்வர் கூறியுள்ளார். கடையநல்லு£ரில் புதிய குடிநீர் திட்டத்திற்காக தமிழக அரசு 22 கோடி ரூபாய் அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்திற்காக வரும் ஆகஸ்ட் 6ம் தேதி துணை முதல்வர் மு..ஸ்டாலின் அடிக்கல் நாட்ட ஒப்புதல் வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

சுகாதார பணிகள் இணை இயக்குனர் மீரான் மைதீன், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காமராஜ், முன்னாள் சேர்மன் அய்யாத்துரை, இடைகால் மாரியப்பன், சிவராமகிருஷ்ணன், முருகேசன், திமுக மாவட்ட பிரதிநிதி கருப்பண்ணன், தென்காசி பாராளுமன்ற தொகுதி இளைஞரணி தலைவர் பாக்கியராஜ், ஆலங்குளம் செல்வராஜ், நகராட்சி சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்

 

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் மகப்பேறு உதவித்திட்டத்தில் 1511 தாய்மார்கள் பயன்

Print PDF

தினகரன்   20.05.2010

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் மகப்பேறு உதவித்திட்டத்தில் 1511 தாய்மார்கள் பயன்

கிருஷ்ணகிரி, மே 20: கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் மகப்பேறு உதவித்திட்டத்தின் கீழ் 1511 தாய்மார்களுக்கு ரூ.90.66 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக நகரமன்றத்தலைவி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிழக அரசின் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் தலைமை வகித்து, 141 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சத்து 41 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ், 8 பயனாளிகளுக்கு தலா ரூ.600 வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரத்து 800க்கான காசோலைய என மொத்தம் ரூ.8.46 லட்சத்திற்கான காசோலை யினை வழங்கினார்.

பின்னர் நகர்மன்ற தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் இதுவரை 1511 கர்ப்பிணி தாய்மார்களுக்கு டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2006&07ம் ஆண்டில் 50 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சமும், 2007&08ம் ஆண்டில் 129 பயனாளிகளுக்கு ரூ.7.74 லட்சமும், 2008&09 ம் ஆண்டில் 558 பயனாளிகளுக்கு ரூ.33.48 லட்சமும், 2009&2010ம் ஆண்டில் 633 பயனாளிகளுக்கு ரூ.37.98 லட்சமும், 2010&2011ம் ஆண்டில் முதற்கட்டமாக 141 பயனாளிகளுக்கு ரூ.8.46 லட்சமும் என மொத்தம் ரூ.90 லட்சத்து 66 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இதே போல் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ் பிரசவித்த தாய்மார்களுக்கு தலா ரூ.600 வீதம் இது வரை 440 பயனாளிகளுக்கு ரூ. 2. 64 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, நகராட்சி சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள்

 


Page 22 of 41