தினகரன் 20.05.2010
அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியில் பிரசவ வார்டு
உடுமலை, மே 20: உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியில் புதிய பிரசவ வார்டு கட்டப்படுகிறது. உடுமலை அரசு மருத்துவமனையில் 24 படுக்கை வசதியுடன் பிரசவ வார்டு உள்ளது. உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை பெண்கள் இங்குதான் அதிகளவில் பிரசவத்துக்கு வருகின்றனர். போதிய இடவசதியின்றி கர்ப்பிணிகள், குழந்தை பெற்றவர்கள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது. எனவே கூடுதல் படுக்கை வசதி செய்து தர வேண்டுமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை அரசு ஏற்று புதிய பிரசவ வார்டு கட்ட ரூ.1 கோடியை ஒதுக்கியது. அதன் உதவியால் 30 படுக்கைகள் மற்றும் நவீன வசதிகளுடன் புதிய பிரசவ வார்டு கட்டப்படுகிறது. அதற்கான பூமிபூஜை விழா நேற்று மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை நடந்தது. நகராட்சி தலைவர் சி.வேலுச்சாமி அதில் பங்கேற்று புதிய கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல் போட்டு பேசினார். அவரை மருத்துவமனை தலைமை டாக்டர் தமிழ்மணி சால்வை அணிவித்து வரவேற்றார்.
விழாவில் கவுன்சிலர் வக்கீல் சிதம்பரசாமி, தலைமை நர்ஸ் காந்திமதி, நர்ஸ் திலகவதி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் விவேகானந்தம், மற்றும் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண் டனர். புதிய கட்டடத்துக்கு பிரசவ வார்டு மாற்றப்பட்ட பிறகு அந்த கட்டடத்தில் கண் சிகிச்சை பிரிவு செயல்பட இருக்கிறது. நகராட்சி தலைவர் அடிக்கல்