Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

மகப்பேறு திட்டத்தின்கீழ் நிதி உதவி

Print PDF

தினமணி 17.03.2010

மகப்பேறு திட்டத்தின்கீழ் நிதி உதவி

சங்கரன்கோவில், மார்ச் 16: சங்கரன்கோவில் நகராட்சியில் மகப்பேறு திட்டத்தின் கீழ் தலா ரூ.3000 வீதம் 700 பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான காசோலைகளை நகராட்சித் தலைவர் பார்வதிசங்கர் திங்கள்கிழமை வழங்கினார்.

டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு உதவித் தொகை ரூ.3000, முதல் தவணையாக 400 பேருக்கும், 2-வது தவணையாக 300 பேருக்கும் வழங்கப்பட்டது.

சுகாதார அலுவலர் குருசாமி, நகர சுகாதார செவிலியர் இந்திராகாந்தி, சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த சுப்பிரமணியன், முருகன், கே.எஸ்.கே. சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 17 March 2010 10:08
 

பொள்ளாச்சியில் 218 மகளிர் குழு சுழல்நிதிக்கு தேர்வு

Print PDF

தினமலர் 15.03.2010

பொள்ளாச்சியில் 218 மகளிர் குழு சுழல்நிதிக்கு தேர்வு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில் 218 மகளிர் சுயஉதவி குழுக்கள் சுழல்நிதி பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இங்கு, 300 குழுக்கள் தரம் பிரிக்கப்பட்டதில், 218 குழுக்கள் மானியத்தில் கடன் பெற தேர்வு செய்யப் பட்டுள்ளன. 200 குழுக்கள் சுழல்நிதி பெறவும், 18 குழுக்கள் பொருளாதார கடன் பெறவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, பொள்ளாச்சி நகராட்சியும், வடக்கு, தெற்கு ஒன்றியங்கள், ஆனைமலை, வேட்டைக் காரன்புதூர், ஒடையகுளம், ஜமீன்ஊத்துக்குளி, சமத்தூர், சூளேஸ்வரன்பட்டி, நெகமம் ஆகிய 8 பேரூராட்சிகளை சேர்ந்த குழுக்களும் சுழல் நிதி பெற தேர்வாகியுள்ளன.ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: தரம் பிரித்து கடன் பெற தேர்வு செய்யப்பட்டுள்ள குழுக்களுக்கு, மார்ச் 16ம் தேதி துணை முதல்வர் தலைமையில் நடக்கும் விழாவில் கடன் வழங்கப் படும். கடன் பெறும் குழுக் கள் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளில் மட்டு மே கடன் பெற வேண்டும்.

குழு மேம்பாட்டிற்குதான், கடன் தொகையை பயன்படுத்த வேண்டும். மேலும், கடனை உரிய காலத்திற்குள் வங்கிகளில் திருப்பி செலுத்த வேண் டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. தேர்வான குழுக்கள் குறித்த முதல் கட்ட பட்டியல், மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இன்னும் இரு தினங்களில், மீதமுள்ள குழுக்களும் தரம் பிரிக்கப்படும். இவ்வாறு, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Monday, 15 March 2010 06:26
 

இந்திய பெண்கள் இதயத்தில் நீங்கா இடம்: சோனியாவுக்கு திருச்சி மேயர் புகழாரம்

Print PDF

தினமலர் 11.03.2010

இந்திய பெண்கள் இதயத்தில் நீங்கா இடம்: சோனியாவுக்கு திருச்சி மேயர் புகழாரம்

திருச்சி: "பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்பதை கட்டாயமாக்கி, இந்திய பெண்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளார் சோனியா' என்று திருச்சி மாநகராட்சி மேயர் சுஜாதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நம் இந்திய நாட்டின் கலாச்சாரமும், பண்பாடும் இதுநாள் வரை பெண்களை உயர்த்திப் பிடிக்கும் இலக்கியங்களாக, இதிகாசங்களாக மட்டுமே இருந்தன. இன்றைக்கு அரசியல் சட்டமாக, அரசின் சட்டமாக 33 சதவீத இட ஒதுக்கீடு என்பதை கட்டாயமாக்கி, இந்திய பெண்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளார் சோனியா.

எந்த ஒரு நாட்டிலும், மொழியிலும், சமுதாயத்திலும், மதத்திலும் பெண்களை மையமாக வைத்தே அனைத்தும் இயங்குகின்றன. பெண் என்ற சொல்லை உச்சரிக்கும் போதே பொறுமை, அன்பு, பொறுப்பு ஆகிய குணங்கள் கண்முன்னே தோன்றும். இரக்கம் காட்டும் விஷயத்தில் தெய்வமும், பெண்ணும் ஒரே நேர்கோட்டில் உள்ளனர். "ஆண் மகனால் செய்து காட்ட முடியாத எந்தவொரு காரியத்தையும் பெண் செய்து காட்டவேண்டும்' என்றார் காந்தியடிகள். பாரதியார், பாரதிதாசன் உட்பட ஏராளமான பெரியோர் பெண்களை சிறப்பித்துக் கூறியுள்ளனர். தமிழக துணை முதல்வரின் தூய உழைப்பினால், கிராமப் புறங்களில் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்கள் உயர்ந்துள்ளனர். "எந்த சமுதாயத்தில் பெண்ணுக்கு மரியாதை தரப்படுகிறதோ, அந்த சமுதாயம் முன்னேற்றப் பாதையில் செல்லும்' என்ற ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றை மனதில் கொண்டு, 33 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக பெண்கள் சார்பில் வரவேற்கிறேன். .வெ.ரா., காமராஜர் போன்றோரின் கனவை நனவாக்கிய சோனியாவிற்கும், மத்திய அரசின் முடிவுகளுக்கு முதல் ஆதரவை அளிக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் திருச்சி மாநகராட்சி மற்றும் பெண்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 11 March 2010 06:45
 


Page 28 of 41