தினமணி 09.03.2010
நகராட்சி சார்பில் மகளிர் தினவிழா
ராசிபுரம்,மார்ச்.8: ராசிபுரம் நகராட்சி அலுவலகம் சார்பில் மகளிர் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் கு.தனலட்சுமி தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.ரங்கசாமி, பொறியாளர் ஆர்.இளங்கோவன், துப்புரவு அலுவலர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.ராமதாஸ் என்.ஆர்.ராமதாஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.
இதில் சுவர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் குழுப் பெண்கள் பங்கேற்றனர். கோலப்போட்டிகள், பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சமுதாய அமைப்பாளர்கள் பி.சாந்தி, எம்.தமிழரசி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.