தினமணி 21.09.2016
பெண்கள் போட்டியிடும் நகராட்சிகள் அறிவிப்பு
தமிழக உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பெண்கள் உள்ளிட்ட
பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நகராட்சி பதவிகள் குறித்த இடவிவரங்களை
தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதற்கான உத்தரவு தமிழக அரசிதழில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி
தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், காஞ்சிபுரம் ஆகிய
நகராட்சிகள் பொதுவானதாகும்; அதாவது ஆண்-பெண் இரு பாலரும் போட்டியிடக்
கூடியதாகும்.
செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய நகராட்சிகளில் பெண்கள் மட்டுமே போட்டியிட
முடியும். தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு உரிய (பொது) நகராட்சியாக மறைமலைநகர்
இடம்பெற்றுள்ளது. இதே போன்று பிற நகராட்சி பதவிகள் குறித்த இட விவரங்களும்
வெளியிடப்பட்டுள்ளன.